Friday, December 16, 2016
கிழட்டு சிங்கங்கள்
நன்றியுள்ள தமிழனாய்..
இருப்போம்.
அன்றைய...
இன்றைய...
கிழட்டு சிங்கங்கள்..
சமுதாயம்..
சீர்திருத்தம்..
சுயமரியாதை..
சிந்திக்க ..
செயல்பட..
சுடர்விட..
ஏன்...
எதற்கு..
எப்படி..என வினவ..
கற்றுதந்தவர்கள்...
இருவரும்.இல்லையெனில்..
நீ...குப்பை காகிதம்...
ஆரிய வேட்டையில்..நீ..அழிந்து போயிருப்பாய்..
ஆழ...
புதைந்துபோயிருப்பாய்..
சொரணையற்று கிடந்த உன்னை...
சூடேற்றிவிட்டவர்கள்...
உன்...
உரிமைக்காக..
குரல் கொடுத்த..
கைகொடுத்து
தூக்கிவிட்ட..
உன்னை..
உயரத்தில்.
ஏற்றிவிட்டு தாங்கும்..
தாங்கிகள்...
சுமைதாங்கிகள்..
அன்று.போராடிய..
ஈ.வே.ரா.பெரியார்
இன்றும்.போராடி கொண்டுயிருக்கிற..
கலைஞர்..
இருபெரும்..
போராளிகள்...
பெரியாரின் பெரும்சீடன்
கலைஞரோடு வாழ்வது
நாம் பெற்ற பேறு..
..
பெரியார்
சொல்
கலைஞர்
செயல்..
செயலே .. நம்மை
உயிர்த்தெழுப்பியது
முடக்கப்பட்ட நம்மை
உணர்வை தூண்டி
உயிர்தெழுப்பியது..
..
வாழும் பெரியார்..
வாழ்வார் நூற்றாண்டு கடந்து
வாழும் ஒவ்வொருநாளும்
தமிழும் தமிழனும்
முண்டாசோடு
வலம் வரலாம்..
..
இரண்டு..கிழட்டுசிங்கங்கள்..
தமிழா..நன்றியோடு.. இரு.
நன்றியோடு
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment