Saturday, December 17, 2016

இவரின் நாக்கே ..எதிரி..

இப்போது சொல்லுங்கள்.. வைகோவை விரட்டியது சரியென்று.. .. ஸ்டாலின் ஆட்களை அனுப்பி தாக்குதல் நடத்தினார் என்கிறார் வைகோ.. அதற்கு அவசியமென்ன இருக்கிறது .. தனக்கு சமமானவரோடுதான் அரசியல் செய்யவேண்டும் தன் நிழலில் கூட அரசியல் செய்ய அருகதையற்றவரை ஏன் கண்டுக்கொள்ளவேண்டும்.. தளபதி சமமாக அரசியல் செய்யும் யோக்கியதைகூட வைகோவிற்கில்லை.. கலவரத்தை உண்டுபண்ணவேண்டியே திரு.ஸ்டாலின் மருத்துமனையில் இல்லாதபோது வந்ததது ஏன்.. .. வைகோ அரசியல் பிழை இனியேனும் ஊடகங்கள் அவரை புறக்கணிக்கவேண்டும் வெத்துவேட்டோடு என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது.. இந்திய ஊடகங்களில் வைகோவின் முகம் வெளுத்துவிட்டது வடமாநிலங்களில் வைகோ இதுவரை கட்டமைத்திருந்த பிம்பம் நேற்றோடு கரைந்துப்போய்விட்டது .. வைகோ ஒன்றுக்கும் உதவாதவரென நேற்றுதான் வடமாநில தலைவர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.. .. தன்னை வளர்த்து உயரத்தில் ஏற்றிவைத்த தலைவனை குலத்தொழிலை செய்ய சொன்ன.. சாதிச்சொல்லி அழைத்து அயோக்கிய அரசியல்வாதி இவர் இதுவரை அமைதிகாத்தது கூட அண்ணாவும் கலைஞரும் சொல்லிதந்த நாகரீகம் தான் காரணம்.. வலிமிகுதி ..ஒரு எல்லையை தாண்டியதன் விளைவு இது.. மிதவாதிகள் நடுநிலையாளர்கள் கூட வைகோவின் அரசியலை விரும்பவில்லை.. எங்கே என்ன பேசவேண்டுமென்று கூட தெரியாத மூன்றாம்தர பேச்சாளர் அவ்வளவுதான் வைகோவின் தகுதி... சிறந்த ஆளுமையாகவோ அல்லது சிறந்த பண்பட்ட பேச்சாளராகவோ இல்லை.. இவரின் நாக்குதான் இவரின் எதிரி.. எங்கே எதை எப்படி பேசவேண்டுமென்று தெரியவில்லை இவருக்கு.. கட்சிதலைவராகவோ கூட இருக்க அருகதையில்லாதவர்.. ஜெயலலிதா பிணத்தின் மீது நின்று திமுகவை பார்த்து கொக்கரித்தவர்.. இவரை விட்டுவைப்பது கூட எதிர்கால அமைதியான அரசியலுக்கு #பேராபத்து.. .. #பிடிங்கியெறியப்படவேண்டிய_விஷசெடி_வைகோ.. .. ஆலஞ்சி மன்சூர் ...

No comments:

Post a Comment