Sunday, December 18, 2016

கோ சி மணி

கோ.சி.மணி படதிறப்பு.. தளபதி திறந்துவைத்தார் அரங்கம் நிரம்பிவழிந்தது.. கும்பகோணம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அண்ணன் மணி அவர்கள் என்பதை கூட்டம் சொல்லாமல் சொன்னது.. நிறைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்கள்.. .. துரைமுருகன் பேசும் போது ஒருவிடயம் சொன்னார்.. கலைஞருக்கு கருப்புகொடி காட்ட தீர்மானித்திருந்தார்கள்.. சிலர் அந்த போகவேண்டாமென்ற போது மணிதான் அழைத்துப்போனாரென்றார்.. அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.. கலைஞருக்கு எதிராக சிலர் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்து தாக்க தயாரானார்கள்...இன்றைக்கு அருள் தியேட்டர் அருகில்.. சம்பவமறிந்து கலைஞரிடம் போகவேண்டாம் என்ற போது மணியை அழைத்து என்ன மணி என்றார்.. ஒரு பதினைந்து நிமிடம் பொறுத்துகண்னே என சொல்லிவிட்டு தொம்பன்குடிசை வரை வந்தார்.. மணி அண்ணனே களத்தில் என்றவுடன் ஒருவரையும் காணோம்.. திரும்பி வந்து கலைஞரிடம் இப்ப போகலாமென்றார்.. கலைஞர் வந்த போது அவ்வளவு அமைதியாக இருந்தது அதுதான் மணி.. .. இன்னொரு சம்பவத்தை தளபதி அவர்கள் நினைவு கூர்ந்தார்.. தளபதி உள்ளாட்சித்துறை அமைச்சர் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக மணி அண்ணன் இருந்தார் அப்பேதுதான் கோ.சி.மணி அவர்களின் துணைவியார் மறைந்துபோனார்.. அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் சென்றார் .. அப்போது அவரை தனியாக அழைத்து கும்பகோணம் தேர் வருகிற வழியை செப்பனிடவேண்டும் அது உன் இலாக்காவில் தான் வருகிறது செய்து கொடு என்றாராம்.. மனைவியின் உயிரற்ற உடல் கிடக்கும் போது கூட தொகுதி நலன் குறித்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க செயல்படமுடிந்ததை தளபதி சொன்னபோது குரல் தளதளத்தது.... எனக்கு ஆச்சரியம் வரவில்லை கலைஞர் தன் மனைவி உடல்நலிவுற்று இருந்தபோதுகூட பொதுகூட்டத்திற்கு சென்றவர். அவரின் வார்ப்பு வேறெப்படி இருக்கும்.. .. எல்.ஜி பேசும் போது கோ.சி.மணியிடம் வன்னியர் சங்கத்தினர் பிரச்சனை செய்ய அவரது வீட்டை முற்றுகையிட்ட சேதியறிந்து எல்.ஜி போன்றவர்கள் விரைந்திருக்கிறார்கள் ..கூலாக ஏம்பா இதுக்கா வந்தீங்க ஏதாவதுன்னா இங்க உள்ளவங்க பாத்துக்கமாட்டாங்களா.. என்றாராம்.. அதை மேற்கோள்காட்டி பேசிய ஸ்டாலின்.. ஒரு சேதி சொன்னார் .. அண்ணன் மணியிடம் சிலர் மற்றகட்சியனர் அடித்துவிட்டதாக சொன்னபோது அடிவாங்கிட்டு வராதே அடிச்சிட்டு வா காப்பாத்துறேன்..என்பார் என்றார்.. புரிந்திருக்கும்.. .. மணி அண்ணன் எல்லா நேரமும் கட்சியை பற்றியும் கலைஞரைப்பற்றியுமே சிந்தித்தவர்.. பொதுக்குழுவில் கடைசியில் அமர்ந்திருப்பார்.. கலைஞர் தலையை நிமிர்த்தி பார்த்தால் போதும் பொதுக்குழுவை கலைஞரின் எண்ணவோட்டத்திற்கு தகுந்தாற்ப்போல மாற்றிவிடுவார்.. கலைஞரின் கண்ணின் மணி.. நிலைகுலையா மாவீரன்.. கழகத்தின் காவிரிக்கரை காவலன்.. மணியின் புகழ் நிலைத்திருக்கும்.. .. #மங்காதமாமணி_எங்கள்_கோ_சி_மணி.. ..

No comments:

Post a Comment