Sunday, December 11, 2016

சில உளறல்கள்.. வைகோ வகையறா..

அதிமுகவில் வீண் குழப்பங்கள் இல்லை கட்டுகோப்பாக இருக்கிறது.. வைகோ... 33 வருடங்கள் ஜெயலலிதாவோடு இருந்தவர் சசிகலா அவரே பொதுசெயலர் ஆக தகுதியுண்டு மஜக அன்சாரி.. சசிகலா அதிமுக பொதுசெயலர் ஆனால் பிராமண சமூகத்தின் ஆதரவு கிடைக்காது எஸ்.வி.சேகர் .. யாரிவர்கள் அதிமுகவின் உறுப்பினர்களை போல பேசிதிரிகிறார்கள் .. ஒரு கட்சியின் பொதுசெயலர் மறைந்துபோகிறார் அந்த இடத்தை நிரம்ப கட்சியினர் மட்டுமே சிந்திக்க பேச வேண்டும் ஆனால் நலம் விரும்பிகள் சில யோசனைகளை சொல்லலாமே தவிர முடிவு அக்கட்சியினரின் தான் எடுக்கவேண்டும்.. குறிப்பாக கட்சி நடத்துவதாக சொல்லிக்கொண்டு தரகுவேலையை பார்க்கும் "நாதாரிகள்" பேசகூடாது .. திமுகவோ காங்கிரஸ் கம்யூனிஸிட் போன்ற கட்சிகள் அமைதிகாக்கின்றன ஆனால் வைகோ அளவிற்கதிகமாக மூக்கை நுழைக்கிறார் என நினைக்கிறேன்.. ஜெயலலிதா மரணத்தில் சில கேட்கும் கேள்விகளுக்கு இவர் முந்திக்கொண்டு பதிலளிக்கிறார்..ஜெயலலிதா மரணப்படுக்கையில் நாட்டைப்பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என்கிறார்.. எப்படி சுயநினைவில்லாமலா.. ரெட்டியோடு நானே பேசினேன் என்கிறார்.. அங்குதான் சந்தேகம் வருகிறது இவர் பொய் சொல்கிறார் ஏனெனில் ரெட்டி இதுவரை யாரிடமும் (கலைஞர் உட்பட) ஜெயலலிதா உடல்நிலைப்பற்றி விவரிக்கவில்லை .. வைகோவிடம் மட்டும் பேசவேண்டிய அவசியம் இல்லை.. இவர் இப்போதெல்லாம் அழையாத விருந்தாளியாக எல்லா இடத்திலும் முன்னில் நிற்கிறார் வைகோ.. பிராமண சமூகத்தினரின் ஆதிக்கம் செலுத்தவதை அல்லது நுழையவிடாமல் தடுக்க ஆசிரியர் காய்நகர்த்தினாரா அதுதான் எல்லை அதுதான் ராஜதந்திரமும் கூட.. .. பிராமணர்களின் ஆதரவு கிடைக்காதென்ற சேகரின் பேச்சை இருகரம்தட்டி வரவேற்கிறேன் அந்த நிலைபாட்டிலேயே நில்லுங்கள் அதுதான் எங்கள் இனத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.. ஏனெனில் எங்கள் புரட்சிகவிஞன் அப்போதே சொல்லிவிட்டான் எப்பாப்பானாயினும் தமிழன் தலையை தடவப்பாப்பான்.. சுயமரியாதைகாரர்கள் ஆதரிப்பதின் நோக்கம் அதிமுக அவாள் திமுகவாக போககூடாதென்பதானே தவிர தேர்தல் ஆதரவல்ல.. மற்றபடி அன்சாரியின் தமாஷ் எல்லாம் பெரிய காரியமாக்கவேண்டாம்.. இவரெல்லாம் திடீரென்று தலைவரானவர் எரிநட்சத்திரம்.. நாளையே மாறி பேசலாம்.. .. அத்தாச்சி வரவேண்டுமென யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்பதும்,அதிமுகவை ஜாதீய கட்டத்திற்கும் அடைக்க நினைப்பதும் வருங்காலத்திற்கு நல்லது.. ஏனெனில் குட்டையை நீண்டநேரம் குழப்பிக்கொண்டே இருந்தால் மீன்கள் தங்காது.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment