Sunday, December 25, 2016

மணல் சிற்பம்

ஜெயலலிதா.. ஊடகங்களும் பார்பன சக்திகளும் சேர்த்து பிடித்துக்கொண்டிருந்த மாய பிம்பம் சிதறுண்டு போகிறது.. ஜெயலலிதாவை நிர்வாகத்தில் புலி என்றும் அவரைப்போல ஆட்சி செய்ய முடியாதென்றெல்லாம் ஜெயலலிதாவிற்கு பரிவட்டம் கட்டினார்கள்.. இதோ அவரின் ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சியாக இருந்திருக்கிறதென்பதை தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்கின்றன.. ஜெயலலிதா திட்டங்கள் எதுவுமே மக்களை முறையாக போய் சேரவில்லை என்பதைவிட 95 விழுக்காடு திட்டங்கள் ஆரம்பநிலையிலேயே முடங்கி கிடப்பதும்.. தொடங்கப்பட்ட திட்டங்களில் அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.. தலைமைசெயலர் வீடும் அலுவலகம் கூட சந்தேக வளையத்திற்குள் வந்து சோதனை செய்யப்பட்டு கோடிக்கணக்கில் புதிய ₹2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது.. அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை களீபரம் செய்திருக்கிறார்கள்.. .. ஜெயலலிதாவின் ஒரே தகுதி அவர் பிராமணர் என்பதால் மட்டுமே மிக சுலபமாக, எதிர்வினையாற்றாமல் மத்திய அரசின் செயல்கள் இருந்தன.. மற்றபடி எந்த தகுதியோ,நிர்வாக திறமையோ சிறிதுமில்லாமல் தமிழக அரசை அதிகாரிகளின் செயல்பாட்டில் நடத்தியிருக்கிறார்.. அதனால் தான் சசிகலா குடும்பம் அதிகாரிகளின் துணைக்கொண்டு தமிழகத்தில் பேயாட்டம் ஆடியிருக்கிறது.. தொலைநோக்கு திட்டங்களோ சமூகமேம்பாட்டிற்காக செயல் வடிவமோ இல்லை.. எங்கும் எதிலும் வெளிப்படையான நிர்வாகமின்றி.. வெளிப்படையான ஊழல் லஞ்சமென சந்திசிரித்தது.. அதை ஊடகங்கள் பெரிதுப்படுத்தாமல்.. முந்திய திமுக ஆட்சியில் நடக்கவில்லையா என பேசி எழுதி மூடிமறைக்க பார்த்தது.. இதுவரை எந்த திமுக அமைச்சரும் ஊழல் வழக்குகளுக்காக தண்டிக்கப்பட்டதில்லை என்று அறிந்திருந்தும் பத்திரிக்கைகள் திரும்ப திரும்ப திமுக மீதே பழிபோட்டன.. ஆனால் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டும் சிறைச்சென்றும்..பெரிய தியாகியாக/நியாயமானவராக/தெய்வமாக காட்ட முயற்சித்தது.. உண்மையில் ஜெயலலிதா சிறந்த நிர்வாகியாகவோ சிறந்த ஆளுமையாகவோ ,கம்பீரமோ இல்லை மாறாக அவரை உயர்ந்திப்பிடித்திருந்தவர்கள் கீழே போட்டப்பின் தான் தெரிகிறது அது சுடப்படாத களிமண் பொம்மையென்று ..சுக்குநூறாகிவிட்டது.. அவரை கூட்டாளிகள்,புகழ்ந்துதள்ளியவர்கள், கூட இருந்தவர்கள் இன்றைக்கு சந்கேகவளையத்தில் ஊழல்குற்றசாட்டில் நிற்கிற போது ஜெயலலிதாவின் லட்சணம் மக்களுக்கு புரிய தொடங்கியிருக்கிறது... .. ஜெயலலிதா இவ்வளவுதான்..ஆம் #ஜெயலலிதா_மணல்சிற்பம்...சிறிய அலைபோதும் கரைத்து கொண்டுபோய்விடும்.. #கரையதொடங்கிவிட்டது_மணல்சிற்பம் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment