Friday, December 16, 2016

கலைஞர்

கலைஞர்.. பெருமகன் .. காலம் தந்த கொடை இவன் மீது வீசப்பட்ட அம்புகளை குவித்தால் இமயம் சிறிதாகும்.. யார் மீதில்லை விமர்சனமென்பீர்.. காந்தியை விமர்சித்த தேசமிது.. .. மூளையின் வலது பக்கம் ஆளும்திறனையும் இடது பக்கம் .. எழுத்து சிந்தனை திறன் கொண்டிருக்கும்.. ஏதேனும் ஒன்றுதான் அதீதமாய் வேலை செய்யும்.. ஆனால் கலைஞருக்கோ இருபுறமும் சிறப்பாய் செயல்படுகிறதென்றார்.. நரப்பியல் நிபுணர் ராமமூர்த்தி.. ஆம்.. #கலைஞர்.. இயற்கை வடித்த #மானுட_அதிசயம்.. .. ஏகாதிபத்தியத்தின் எதிரி ஆரியத்தின் சிம்மசொப்பனம் எதிரிகள் கலைத்துப்போய்விட்டார்கள்.. கலகலத்தும் போனார்கள் தலைமையின் இலக்கணம்.. இவரை எதிர்த்தால் மட்டுமே சோறு கிடைக்கும்.. எதிரிக்கும் துரோகிக்கும் வாழ்வளிக்கும் அட்சயம்.. .. தோண்ட தோண்ட வற்றாத தங்க தமிழ் ஊற்று.. தேனருவி..தமிழோ செவிக்கு இன்ப தேனருவி.. சொல்லும் செயலும் சமூகநீதிபேசும் சமத்துவபெரியார்.. .. பெரியார் சொன்னார்.. நாவலரா கலைஞரா என்றால்.. கலைஞர்தான் சரி.. பெரியாரின் நேரடி சீடன்.. இன்னும் இன்னும்.. எதிரிகளுக்கு வாழக்கை வேண்டும்.. அதற்காகவாவது.. கலைஞர் .. நீடுழி வாழவேண்டும்.. வாழ்வார்.. பெரும்வாழ்வு.. நூற்றாண்டை கடந்து.. .. #கலைஞர் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment