Friday, December 16, 2016
நெஞ்சுக்கு நீதி எங்கள்.. கலைஞர்
நெஞ்சுக்குநீதி..
ஒருதலைவனின்..பாதை.
தமிழ் தலைவனின் பாதை
சறுக்கல்கள்.
சமாளிப்புக்கள்,
விடைதெரியாதபுதிர்கள்,
விளக்கங்கள்.
துரோகிகளையும்
குழிபறித்தவனையும்
குறைச்சொல்லா பாங்கு
தலைவனுக்கே உரிய
அஞ்சாமை..
கனிவுதரும்.
சொல்லாற்றல்
எதிரியும்
ஈர்க்கும்..
எழுத்தாற்றல்.
ஐந்துவரை 3616
பக்கம்..
படித்தவனை சொக்கவைக்கும்
ஆறாய் பாய்ந்து
வந்தது
ஆறு..
உனை வெல்ல
எழுத்தில் உனை வெல்ல
யாரு?
நீதியில்...
நிலையான்
யாரும்
அரசியலில்
நிலையான்
புகழ்ந்தவனையும்
இகழ்ந்தவனையும்
ஒரே நேர்கோட்டில்.
ஒரேபார்வையில்
பார்த்தவன்.. நீ
ஆறு..
தமிழமுதம்
ஆவலாய்..
இனி ..
ஏழும் வேண்டும்
நெஞ்சுக்கு நீதி
ஏழும் வேண்டும்
எழுந்து வா.. விரைந்து..
எழுத வேண்டும்
நெஞ்சுக்கு நீதி.. ஏழு
..
நெஞ்சுரத்தை
நெஞ்சு சளி என்ன செய்யும்..
சிலர் ஆசையை
நிராசையாக்கி
நிமிர்ந்த நடையோடு
எழுத்தில்..
நிமிர்ந்த நடையோடு
எழுதவா... ஏழு..
..
உன் எழுத்து வசியம்.
படித்தே ஆகவேண்டும்.
அவசியம்..
ஆவலாய்..
நிமிர்ந்து நிற்கும்.
தமிழ்..
நிமிர்ந்து..நிமிர்ந்து
..
கலைஞரே..
நீரே..
தமிழனின் நெஞ்சுக்கு
#நீதி.
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment