Tuesday, December 13, 2016
நான்.. யார்
யார் நீ என்றார்..
நான்தானென்றேன்..
நீயென்றால்..
எதில் நீ...யென்றார்..
..
எதிலும் நீ இல்லை
பின் எதற்கு..
நான் தான் என்கிறார்..
அப்பனின் இச்சையில்
அகிலம் கண்டாய்
அகிலம் கண்டதால்..
நீ.. நீயென்கிறாய்..
வந்து விழந்த பிண்டம்
அவ்வளவுதான்.. நீ..
..
நீ..நீயாக
ஏதேனும் செய்
அடுத்தவரின் வலியை உணர்
அதிகம் பேசாதே செவிமடு..
அனாதைகள் மீது அக்கறை கொள்
அளவோடு புசி
அன்பு செலுத்து
வறியவர் மீது
இரக்கம் காட்டு
எல்லாம் எனதென்பதை விடு
உனக்கானதை தவிர
எல்லாம் உனக்கானதல்ல
பிறருக்கு சேர்த்தே
உன்னிடம் தரப்பட்டிருக்கிறது ..
..
தாய் மொழியை நேசி
இன உணர்வு கொள்
எதிரியை எதிர்கொள்ளும்
வல்லமை கொள்..
அநீதி கண்டு அடங்க மறு..
சொல்லி அடி..
வந்து வாழ்த்தற்கான
எச்சத்தை வை..
எல்லாமிருந்தும்
இல்லாததுபோல் இரு..
..
எல்லாம் படி
அறிவோடு சேர்
ஆணவம் தவிர்..
அப்புறம் வா..
நீ..யாரென..
நான் சொல்கிறேன்...
நானென்ன..
ஊர் சொல்லும்..
நீ..தான்
நீயென்று..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment