Thursday, December 29, 2016
ஏறுதழுவுதல்
ஏறுதழுவுதல்..
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகையில்
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்"..
என்ற பாடல் வருகிறது.. அதற்கு நச்சினார்க்கினியர் கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்."
..
இது ஒரு ஆயர்குலம் அதாவது கோனார்கள்
மாடுவளர்ப்போர் வழக்கமாக இருந்ததாக சொல்கிறது.. ஆனால் ஜல்லிக்கட்டு சிறியதொரு வேறுபாடு உண்டு.. ஏறுதழுவுதல் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருந்ததில்லை ஆனால் ஜல்லிக்கட்டு கிராமதேவதைகளை அதாவது குலதெய்வங்களை கும்பிட்டு நடந்துவதாக இருந்தது
ஏறுதழுவதல் என்ற பெயரில் சங்கஇலக்கியங்கியங்களில் அதாவது கி.மு.2000 க்கு முன்பே இருந்ததாக ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஆய்ந்து சொன்னார்கள்..
..
ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கூட புலிக்குளம் வகைகாளைகளை பயன்படுத்தினார்கள் .. ஜல்லிக்கட்டை இப்போதெல்லாம் ஒருசாராரின் விளையாட்டாக்கி ஜாதீய கூட்டுக்குள் அடைத்ததே பிற சமுதாய மக்களின் பார்வையில் அது தேவையில்லாத ஒன்றாகி ஒத்துழைக்க மறுத்தார்கள்.. ஏறுதழுவுதல் என்பதை மத நம்பிக்கையில்லாத ஒன்றாக கொண்டாடினார்கள் என நிறைய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருப்பதாக ஐராவதம் சொல்கிறார்.. பின்னாளிலேயே அது மதம் ஜாதிய கூட்டுக்குள் வந்ததாகவும் ஆய்வாளர் பதிவு செய்கிறார்..
..
சமகால இலக்கியங்களில் சி.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவல் ஜல்லிக்கட்டை நம் கண்முண் நிறுத்தும்.. மிக தெளிவான நடையில் இயல்பாக பதிந்திருப்பார்.. ஜல்லிக்கட்டை நேரில் காணும் உணர்வை தரும்..
..
சிலர் காலமாற்றத்திற்கேற்ப மாறிக்கொள்ளவேண்டாமா இன்னும் காட்டுமிராண்டி காலத்திலேயே இருப்பீர்களா என்கிறார்கள்.. காட்டுமிராண்டிகாலத்திலும் தாயை தாயாகதான் மதித்தோம்.. சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும் இனத்தின் மீதான தாக்குதலை எப்படி வாய்மூடி இருக்கமுடியும்..ஒரு இனத்தை அழிக்க முற்பட்டால் முதலில் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவேண்டும்..என்கிறார் இலங்கையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்..கலாநிதி குணசிங்கம் .. ஒருமொழியை /இனத்தை, அதன் வளத்தை அழிக்க கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலே சிறந்தது..
அதைதான் இப்போது செய்துவருகிறார்கள்..
நமக்குள் இல்லாத ஒற்றுமையை தான் அவர்களின் பலமாக கருதி பண்பாட்டு மீதான தாக்குதலை தொடர்ந்து செய்துவருகிறார்கள்..
..
2008 மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைப்பெற்றார் .. ஆனாலும் திமுக ஆட்சியில் தொடர்ந்து சில நிபந்தனைகளோடு நடத்த அனுமதி கொடுத்தது.. சிலர் காங் திமுக ஆட்சியில் தான் தடை என்பது போல சித்தரிக்கிறார்கள் .. தடையை பெற்றது மேனகா தொடர்ந்த வழக்கில் என்பதும் peta அமைப்பின் அழுத்தமுமே காரணம்..மிருகவதை என்பதை ஏற்கமுடியாது ஏனெனில் யானைகளை திருவிழாக்கு தயார் செய்வதை பார்த்தால் காளை வளர்ப்பை குறைசொல்லமாட்டார்கள்.. போட்டியில் தங்கள் காளை யாரும் அடைக்கிவிட கூடாதென்பதற்காக சில ஏற்கமுடியாத செயல்களை செய்ததாகவும் மாடுபிடி வீரர்கள் மதுவை அருந்திவிட்டு வருவதாகவும் சொல்லபடுவதை மறுப்பதற்கில்லை ஆனால் இப்போதெல்லாம் மருத்துவ பரிசோதனைக்குட்பட்டே நடத்தபடுகிறது..
அனைவரும் ஒன்றுப்பட்டு நின்றால் மட்டுமே கைகூடும்..
இனி..
#வாடிவாசல்_திறக்கபடுமா..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment