Saturday, December 17, 2016
அரசியல் நாகரீகம்
அரசியல் நாகரீகம்..
முன்பெல்லாம் பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்கள் எதிர்க்கட்சியினரோடு அரசுயல் ரீதியான எதிர்ப்பை மட்டுமே கொண்டிருந்தனர்.. பிற நிகழ்வுகளில் நட்புபாராட்டியே வந்தார்கள்.. ஆனால் எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு குறிப்பாக முதல் இரண்டாண்டுகள் எதிரெதிரே சந்திக்கும் போதெல்லாம் நட்போடே பழகினர்.. பிறகு எங்கே கலைஞரை சந்தித்தால் அவரோடு நாஞ்சிலாரைப்போல போய்விடுவார்களோ என அஞ்சி திமுகவினரை சந்திப்பவர்களை #கட்டம்கட்ட ஆரம்பித்தார் எம்ஜிஆர்(மகோரா)..
எம்ஜிஆரை தொடர்ந்து எதிராய் அரசியல் செய்த ஜெயலலிதாவும் எம்ஜிஆரின் பார்முலாவையே இந்த விடயத்தில் கைக்கொண்டார்..
..
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜியும் பெரியாரும் கூட தனிப்பட்டமுறையில் பகைமை கொண்டதில்லை.. கடுமையான எதிர் அரசியல் செய்த காமராஜரோடோ,பக்தவத்சலத்தோடோ,ராஜாஜியோடோ என்றைக்கும் கலைஞர் நாகரீகமான அரசியலையே செய்துவந்தார்.. எம்ஜிஆரின் அரசியல் வரவே தமிழகத்தில் எதிர்கட்சிகளென்றாலே எதிரியைப்போன்ற மனப்பான்மையோடு அரசியல் செய்கிற கொடுமை இருந்துவந்தது.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நாகரீக செயல்பாடு மெல்ல துளிர்விட தொடங்கியிருப்பது நல்லதொரு தொடக்கத்தை தரும்..
..
எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு காழ்ப்புணர்ச்சி அரசியலுக்கு முடிவுகட்டுவோம்..கலைஞரை இன்று காண தம்பிதுரையும் ஜெயகுமார் வந்திருப்பது நிறைவான மகிழ்வை தருகிறது.. தொடர்ந்து எள்ளிநகையாடியும் மாண்பிமை ஸ்டாலின் தொடங்கிவைத்த பண்பான அரசியல் நாகரீகம் தொடரட்டும்..
கொள்கையில் உறுதியாய் எதிர்க்கவேண்டிய விடயங்களை கடுமையாக எதிர்ப்போம்.. எதிர்ப்பில் எதிரிகளை திணறவைப்போம்.. இவையாவும் அரசியலுக்காக மக்கள்நலன் சார்ந்த விடயங்களில் சமுக,சமுதாய நலன் வேண்டியே இருக்கும்..
...
#நல்லவை_தொடங்கட்டும்...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment