Wednesday, December 28, 2016
சசிகலா நடராஜன்
அதிமுக பொதுக்குழு..
சசிகலா நடராஜன் பொதுசெயலாளராக தேர்வு செய்யபடலாம் காரணம் அதை தவிர வேறு மார்க்கம்/வழி இல்லை இருக்கிறவரை சுருட்டலாமென்கிற மனோபாவம் தான் மேலோங்கி நிற்கிறது.. தமக்குள் அடித்துக்கொண்டால் துடைத்தெறியபடுவோம் என்பதால் சிறிய சலசலப்பை கூட தராமல் எதிர்ப்பை காட்டாமல் நடந்தேறும்.. சசிகலா பௌதுசெயலராக தேர்வு செய்யபடுவார்.. தை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் #முதல்வராகலாம்..
..
இதனால் கட்சிக்கு ஆட்சிக்கோ தற்காலியமாக எதுவும் பின்னடைவு ஏற்படாது ஆனால் மக்களை சந்திக்கும் போது இது போன்று பெரும்பான்மை கிடைப்பதென்பது அரிதாகும்..இதில் ஒரு சௌகரியம் உண்டாகும் மறைமுகமாக காய்நகர்த்துபவர்கள் காணாமல் போவார்கள்.. சிறிய லெட்டபேட் கட்சிகள் தலையெடுக்காது.. தேசியகட்சிகள் என்ற பேரில் வலம் வரும் கம்யூனிஸ்ட்கள் வேறுவழியின்றி சசிகலாவின் பின்னால் செல்ல நேரிடும் .. இவையாவும் நான்காண்டுகள் தொடருமா என்பதும் சந்தேகம்..ஏனேனில் சசிகலா நடராஜனின் சாதீய சாயல் மாறுவது அவ்வளவு சுலபமில்லை.. கொங்குமண்டலம் எப்போதும் போல் அதிமுகவை பின்துணைக்குமா என்பதும் மிகபெரிய கேள்வியாக எழுந்துநிற்கிறது..
..
பொதுக்குழு எதிர்ப்பின்றி நடத்த எல்லா ஏற்பாடுகளும் நடப்பதாக தெரிகிறது நேற்றைய தினம் சசிகலா புஷ்பாவின் கணவரை அடித்தது கூட ஒரு எச்சரிக்கை தான்.. அடித்தவனை விட்டுவிட்டு அடிவாங்கியவனை கைது செய்யும் அவலம்.. இது அதிகாரம் எங்கள் கையில் என்பதை காட்டும் தந்திரம்.. ஒழுங்காக வந்து அமைதியாக செல்லவேண்டுமென விடப்பட்ட எச்சரிக்கை .. திரு.பன்னீர் செல்வம் பதவி விலக மறுத்தால் ஒரு வேளை சலசலப்பு அல்லது கட்சி இரண்டாகும் சாத்திய கூறுகள் உண்டு அது எந்தளவிற்கென்பதை பொறுத்திருக்கவேண்டும்.. காரணம் நேற்றைய இல.கணேசனின் பேச்சு சசிக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்திருப்பதை காட்டுகிறது.. நிறைய எதிர்பார்ப்புகளை தந்தாலும்
எதிர்பில்லாமல் அத்தாச்சி ஆட்சி கட்டிலில் அமரலாம்..
..
#புகைந்துக்கொண்டாதானிருக்கும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment