Thursday, December 1, 2016

இன்குலாப்

இன்குலாப்.. மாணவர் பருவத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தவர் இந்திஎதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட #மொழிப்போர்வீரர்.. பின் சிறிதுகாலம் கழித்து மார்க்ஸியத்தில் ஈடுபாடுகொண்டு பொதுவுடைமை சித்தாந்தத்தில் இணைத்துக்கொண்டவர்.. முற்போக்கு சிந்தனையாளர் சிறந்த கவிஞர்... கடவுள் மறுப்பாளர் நாத்திகர்.. .. இஸ்லாமிய குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்ணணியில் பிறந்து வளர்ந்தாலும் கல்வியறிவில் சிறந்துவிளங்கியவர் கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தாக்குதலுக்கு பிறகுதான் மார்க்ஸிய லெலினிய புரட்சிகர இயக்கத்தில் இணைந்தார்.. அப்போதுதான் சாகுல்ஹமீதாக இருந்தவர் இன்குலாப் (புரட்சி) என அறியப்பட்டார்.. .. உண்மையான காம்ரேடாக(தோழராக) வலம் வந்தவர்.. தமிழ்தேசிய விடுதலையிலும் இவர் ஆர்வம் கொண்டு செயலாற்றியிருக்கிறார்.. தமிழீழ தேசியதலைவர் வேலுபிள்ளை சந்தித்திருக்கிறார்.. ஆனால் வைத்து அரசியல் ஆதாயமோ அல்லது வயிறுவளர்க்கவோ செய்யவில்லை.. உண்மையான நேர்மையான இன்னும் சொல்லப்போனால் எளிமையான கம்யூனிஸ்டாக Real Communist வாழ்ந்தவர்.. #நாங்களும்_மனுசங்கடா ..என்றபாடல் இன்றைக்கும் தலித்திய மேடைகளில் பாடப்பட்டுவருகிறது.. கவிஞர் நாடகாசிரியர் முற்போக்கு சிந்தனையை எழுத்துக்களில் தந்த சமகால சமரசம் செய்துக்கொள்ளாத ஒப்பற்ற கவிஞர்.. .. முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துக்கொண்டிருக்கிறது என்தாய்மொழி.. #இன்குலாப்_தமிழ்தேசியகவிஞன்.. .. விடைகொடுப்போம்.. #இன்குலாப்_இன்குலாப்.. #லால்சலாம் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment