Saturday, December 31, 2016

2017..

வேண்டும்..வேண்டும்.. 2017 ----------------------- மனம் எனும்.. மாய பிசாசை அடக்கி ஆள வேண்டும். என்னுள் மிருகம் எழுந்திடாது காத்தல் வேண்டும் ..மன.. அமைதி வேண்டும்.. அறிவெனும் ஊற்று .. வற்றாது வேண்டும். தமிழ் மீது பற்று...என்றும்.. ஊற்றாக வேண்டும்.. என்னுள்..ஊற்றாக வேண்டும்.. என்.. கயமை ஒழிய வேண்டும்.. காமமும் களவும் .. அளவோடு வேண்டும். அளவிலா..கற்றல் வேண்டும்.. என் தேடல் பணி தீராது வேண்டும்.. அழகான ..பொய்யும்.. அளவிலா மெய்யும் வேண்டும்... முகம் மூடா.. அகம் மூடா. . அறம் தவறா.. நெறி பிறழா.. வாழ்வு வேண்டும். மதி கெடா.. மடமை தேடா .. வழி வேண்டும்.. என்றும்..நான்.. நான் ..நானாக வேண்டும்.. அன்புடன் ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment