Thursday, December 8, 2016

தலைமை...

தலைமை.. ஒரு கட்சியின் தலைமை.. வருங்கால தலைவரை உருவாக்காமல் போவதென்பது நிறைய குழாயடி சண்டையை/தரகு வேலைகளுக்கு கொண்டுபோகும். சர்வாதிகாரபோக்குடைய தலைமை கீழ் நடத்தப்படும் கட்சிகள் வரலாற்றில் கரைந்தே போயிருக்கிறது. பின் வருபவர்களின் நிலை பரிதாபமாக நேரிடும்.. .. காலங்கள் கடந்தும் நிறைய வெற்றி தோல்விகளை சந்தித்தும் திமுக சிறந்து செயல்படுவதற்கு/திகழ்வதற்கு காரணம் உட்கட்சி ஜனநாயகம்.. யாரை எப்படி அவர்களின் சேவைகள் கட்சிப்பணிகள் தொண்டு உழைப்பு எல்லாம் கணக்கில் கொண்டு தேர்வாகி வருகிறார்கள். படிப்படியாக மெருகேற்றபடுகிறார்கள்.. தலைமைக்கு சரியானவரை இனம் காட்டுகிறார்கள் இவையெல்லாம் ஜனநாயத்திலேயே சாத்தியம்.. நிறைய கருத்து வேற்றுமை இருந்தபோதும் இறுதியில் தலைமை தேர்வு செய்தல் / கட்டுபடுதல் என்பதும் இயக்கம் தொடர்ந்து ஜனநாயக கடமையாற்ற முடியும். திமுக தொடர்ந்து கட்சி ஜனநாயகத்தில் நிறைய கருத்தொற்றுமை/வேற்றுமை இருப்பினும். கட்டுபடுதலில் ஒன்றுபடுகிறார்கள்.. சட்டென்று ஒற்றை இரவில்/ நாளில் அதிகாரத்திற்கு வருவதென்பது இங்கே நடக்காது.. அது ஸ்டாலினாக இருந்தாலும்.. தீட்டபடுவார்கள் போராயுதம் போல... இந்தியாவின் மிகச்சிறந்த ஜனநாயக இயக்கங்களில் திமுகவும் ஒன்று.. ஆனால். இதற்கு நேர்மாறான கட்சி அதிமுக .. கட்சியென்பதைவிட கம்பெனி அல்லது அமைப்பு என சொல்லலாம்... திரு.ம.கோ.ரா. அதிமுகவை நிறுவிய போது தன்னிடமுள்ள கவரும் கவர்ச்சியைமட்டுமே மூலதனமாக கொண்டார்.. எழுபதுகளின் இறுதிகளில் சினிமா மோகம் தமிழகத்தை ஆட்கொண்டிருந்த காலம்.. நிழலை பின்தொடர்ந்து தமிழன் அறிவிழந்து /சுயசிந்தனையின்றி நிஜமறியாதிருந்த காலகட்டமது.. திரு.ம கோ ரா அதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் .. தொடர்ந்து இந்திராவின் சாவும் மகோரா வின் நோவும் இரண்டுமுறை கைகொடுத்தது .. சட்டென்று உணர்ச்திவயபடும் தமிழனின் சுபாவம்..அவருக்கு கைகொடுத்தது.. அதன்பின் செல்வி.ஜெயலலிதாவை ராஜீவின் சாவும் பிறகு பணமும் கௌகொடுத்து தூக்கி நிறுத்தியது ..இவருமே.. கட்சியில் சரியான நபரை இனம்கண்டு தேர்வு செய்து பயிற்சியும் தந்து வழிநடத்தாமல் போய்விட்டார்கள் .. அதனைல் தான் அதிமுகவை சில பாசிச சக்திகள் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர துடிக்கின்றன.. தெரிந்து தெரியாமலோ மக்கள் செய்த ஒரு நல்லகாரியம் எதிர்க்கட்சியை பலமாக அமைத்திருக்கிறார்கள் அதாவது ராசசபலம் இல்லாத ஆளும்கட்சி.. எவ்வளவு பிரிந்து சிலகாலம் கவர்ச்சி/பணம் அடிமைத்தனம் பின்னால் சென்றாலும் திராவிட இனத்தின் வேர் பலமாக நெஞ்சில் பதிந்திருக்கிறது .. அதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. சிலர் அதிமுக என்ற நிறுவனத்தை சொந்தம் கொண்டாட முயல்வதும் யார் தலைமையின் கீழ் என்பதிலே பொறாமை வருவதையும் காண முடிகிறது.. சர்வாதிகார தலைமையின் கீழ் வாய்பொத்தி அடிமைகளாய் இருந்தவர்கள்..இப்போது சுதந்தர காற்றை உணரும் போது தன்மானம் வெளிவருகிறது நம்மை கட்டுபடுத்த இவர் யார் ஏன் நமக்கு தகுதியில்லாயா என எண்ணம் வருகிறது இது வரும் .. ஆனால் நிலைத்து நின்று ஜெயிக்க இயலாது.. காரணம் சரியான பயிறிசியின்மை..ஜனநாயக ரீதியாக பேராடி உயரவரவில்லை.. இவர்கள் ..ஒருகாலகட்டத்திற்கு பிறகு மறைந்து யாரும் அறியாது யாருக்கும் வேண்டாது போய்விடுவார்கள்.. இப்போது நடப்பது அதிமுகவில் நடப்பது இதுதான்.. #யார்பெரியவன்.. .. இப்போது புரிகிறதா. .. வெறும் நியமனத்தால் பொறுப்புகளுக்கு ஆட்களை நிரப்புவதால் ஏற்படும் பின்னடைவு .. உட்கட்சி தேர்தலால் ஜனநாயகம் கட்சியின் வேர்வரை பலம் பொருந்தியதாக தொடர்ந்து வெற்றி/தோல்விகளின் இயங்கமுடிவதின் ரகசியம்.. .. #திமுகஇனத்திற்கானஜனநாயகஇயக்கம். .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment