Tuesday, December 13, 2016
சசியின் தேவையை அறிந்தவர்கள்
சசிகலா அதிமுகவினருக்கென்றில்லை
பாசிசவாதிகளுக்கும் தவிர்க்கமுடியாதவராகிறார்
..
சசியை தவிர யாருமே இல்லையா என கேள்வி வரும் கூட யாருக்குமே தகுதியில்லை அல்லது அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்ற பதிலும் சேர்ந்து வரும்..
அரசியலில் கட்சியின் நிலைநிறுப்பை உறுதிசெய்வது மிக அவசியமாகும்.
அதிகாரம் நான்கரை ஆண்டுகள் இன்னமும் இருக்கிறது அதற்குள் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே சம்பாதித்தை காப்பாற்றிக்கொள்ளவும் மீண்டும் முடிந்தவரை சேர்த்துக்கொள்ளவும் முடியும் என்கிற யதார்த்தத்தை அறிந்ததால் தான் கட்சியின் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பிரபலங்கள் மறுப்பேதும் சொல்லாமல் #அத்தாச்சியை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்..
..
மிக சிறந்த தலைமையை தந்துவிட போவதில்லை அரசியலில் மிக சாதூர்யமான முடிவுகளை எடுத்துவிட போவதில்லை, .. சமூக நீதி தமிழக நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் சார்ந்த (காவிரி,முல்லை,பாலாறு) போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எதிர்ப்பையும் காட்டாமல் மத்தியரசின் #தலையாட்டிபொம்மையாக அரசை நடத்தி செல்வார்கள்.. வரும் நான்காண்டுகளுக்குள் விரும்பதகாத நிகழ்வுகள் இலைமறைவில் நிறைவேறும் ஏறக்குறைய பாசிசஆட்சியை போல குறிப்பாக ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் ஒளிந்திருந்தவர்கள் அதிகாரமையத்தில் அமர வாய்ப்பை பயன்படுத்திகொள்வார்கள். ஏனெனில் காலஅவகாசம் அதிகமிருப்பதால் இவர்களின் நோக்கமும், எதிர்மறையாளர்களின் சூழ்ச்சியும் வெல்லும்.. ஆனால் இதை சரிசெய்ய பலஆண்டுகளாகும்.. இப்போதே கவனித்தால் புரிந்திருக்கும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உயர்பதவிகளை ஆரியர்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் ஆக்கரமித்துவிட்டார்கள்.. ஆட்சியில் அதிகாரமையத்தை கையில் எடுத்ததால் தான் நீட்தேர்வு வரை அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தொடங்கிவிட்டார்கள்
குறிப்பாக பிற்படுத்தபட்டோர்களின் தலையில் வைத்தாகிவிட்டது பிற்படுத்தபட்டோரின் உரிமைகள் (சலுகைகள்அல்ல) பறிபோக தொடங்கியாகிவிட்டது..
தமிழகத்தில் ஐம்பதாண்டுகாலம் தூக்கியறிப்பட்டவர்கள் மீண்டும் தலையெடுக்க இதுபோன்ற பலமான எதிர்பில்லாத சரியான தலைமையில்லாத கட்சியின் ஆட்சிதான் அவர்களின் தேவை.. அதனால் மௌனமாக ஆதரிப்பார்கள்..
அதை தான் #இந்து_ராம் அர்ஜூன் சம்பத் போன்றோர் சசியை சந்திப்பதின் பின்னணி .. தேர்தலை நோக்கி நகர்த்தினால் உள்ளதும் போன கதையாகும் என அவர்கள் அறிவார்கள்..
..
சசியின் தேவையை அறிந்தவர்கள் அவர்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment