Friday, December 23, 2016

நான்..

என்ன..செய்துவிட்டேன்.. ஆண்டொன்று போனது.. அவ்வளவுதான் .. .. கொஞ்சம் ஆணவம், கொஞ்சம் அகங்காரம் .. கொஞ்சம் அன்பு.. சொன்ன சேதிகள்..கொஞ்சம் சொல்லாததோ..நிறைய எஞ்சும் .. பகுத்தறிவு.. தமிழர் நாகரீகம்.. தமிழர் அரசியல் தமிழன் பண்பாடு.. திமிர்.. வீரம் விளையாட்டு கோபம் எல்லாம் பந்தியில் வைத்தேன் .. கொஞ்சம் திராவிடம் பேசினேன்.. எதற்கும் அஞ்சா திமிரோடு.. கோவம் கொண்டேன்.. தமிழ்குல பகைவர் மீது கருணைக்கொண்டேன்.. வாடி நின்ற வறியவர்மீது.. எல்லாம் நேர் நின்றே செய்தேன்.. புறம் நின்று தாக்குதல் தமிழன் மரபில்லை என்பதால்.. .. கொஞ்சம் காதல். கொஞ்சம் காமம்.. கொஞ்சம் கலவி..சொன்னேன்.. பெண்கள் தம்மை கேலி பேசும் நிலைக்கண்டால் பெரியாரின் தடியெடுத்தேன் எல்லாம்.. சுயமரியாதை நிழலில் நின்றே செய்தேன்.. .. நான்.. சிறகுள்ள பறவை எல்லா மரக்கிளையிலும் அமர்வேன் ஆன்றோர் சபை.. அறிவிக்கொவ்வா ஆன்மீகம் பேசுவோர் சபை சான்றோர் சபையென.. அடிக்கடி அமர்வேன்.. அறிவின் சுடரில் அமுதம் சுவைப்பேன்.. நான் ரசித்தவை அறிவேற்றதை.. அவைக்கு வைப்பேன்.. அவ்வளவு தான்.. .. ஆலஞ்சி மன்சூர்...

No comments:

Post a Comment