Tuesday, December 6, 2016

போய்..வா தாயே

மரணம் அழகு.. இங்கேயொரு பேரழகு மரணமாய்.. துரோகிகள்.. புடைசூழ .. இறுதியாய் இந்த...பறவை விடை வாங்குகிறது.. .. எதிர்த்து நின்றவன் கலங்கி நிற்கிறான்.. துரோகிகள்.. மௌனமாய் காய்நகர்த்துகிறான் அடங்காமல்.. அடக்கிவைத்த திறன் இன்று அடங்கியவர்கள் முன் அசையாது கிடக்கிறது.. .. பொய்களால் அம்பெறிந்து அரசியலில் நின்றாடியவர் தன் நிழல் கூட துரோகியாகுமென அறியாமல்போன விந்தை.. நடித்தே அரசாண்டவர் தன் கையிருப்பும் நடிப்பதறியாது போனார்.. .. அன்பும் நட்பும் கிடைப்பதறிது.. நான் கலப்படமற்ற சுயநலமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பை கண்டதேயில்லை.. எத்தனை ரணம்.. இத்தனை காலம் உன்னை புகழ்ந்தவன் எதிர்பார்த்து கிடந்தவன்.. உன் கடை கண்ணின் பார்வைப்பட்டு பிழைக்கமுடியாதா என்றெண்ணியவன்.. நீ.. இருக்கும் வரை கரைந்தவன் இன்று மௌனமாய் அதிகாரத்தில் ஆனால்... வாழும் போதும் மறைந்தபோதும் யாரும் உன்னை உண்மையாய்.. நேசிக்கவில்லை உன் எதிரியை தவிர.. .. #போய்வா_தாயே.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment