Thursday, December 8, 2016
ஜெயலலிதா... யாரென
அதிமுக இரட்டை இலையால் தான் ஜெயித்தது ஜெயலலிதாவால் அல்ல
ஆவடி குமார்..
எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை காரணம் அதிமுக காரர்கள் கொள்கையில் இணைந்தவர்கள் இல்லை
அல்லது தலைமையால் அவர்தம் திறமையை கண்டு வியந்து ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள் அல்ல.. அல்லது தெளிவான சிந்தனை கொண்டோ
தன் இனத்தை மொழியை காக்க உறுதிபூண்டோ, மக்களின் சேவைக்காகவோ இணைந்தவர்கள் அல்ல அதனால் தான் இவர்களால் ஜெயலலிதாவை ஒருநொடியில் தூக்கியெறிய முடிந்தது .. இவர்கள் நோக்கம் பதவியும் பணமும் மட்டும்தான் இவர்களை இப்படி வளர்த்தெடுத்தது ஜெயலலிதாதான். அடிக்கடி பதவி தந்து பிடிங்கி யதேச்சிய/சர்வ அதிகாரமும் தனக்குமட்டுமே உண்டு என்ற போக்கு அதிமுகாரர்களை பதவியை நோக்கி வர ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என தெருவோரங்களில் நிற்க வைத்தது.. உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் தங்கள் பதவியை காத்துக்கொள்ள எங்கே பதவி பறிபோய்விடுமோ என அஞ்சி .. ஜெயலலிதாவிற்காக காத்துகிடந்து கண்டபோது கிடந்து விழுந்து காரில் டயரை கூட கும்பிட்டு நடித்து நாடகமாட முடிந்தது..
சுரணையின்றி மானம் மரியாதைபோய் இவர்களால் உலா வரமுடிந்தது..
காரணம் ஜெயலலிதா கண்பார்வை மட்டுமே தம்மை ஒரேநாளில் புகழ் பதவியை நோக்கி செலுத்தும் என்ற நம்பிக்கைதானே தவிர ஜெயலலிதா மீது அன்போ உண்மையான பாசமோ கொண்டல்ல..இவர்கள் மூச்சுபிடித்து ஜெயலலிதாவை உயர்த்தி பிடித்ததும் .. அநியாயத்திற்கு புகழ்ந்து தெய்வம் ரேஞ்சுக்கு கொண்டுபோதும்.. மற்றபடி இவர்கள் அன்பால் பாசத்தால் கொள்கையால் உண்மையான தொண்டராய் எப்போதுமே இருந்ததில்லை..
..
ஆவடிகுமாரின் பேச்சு...
மன்னனின் வீட்டு நாய் செத்தபோது அழுத மந்திரிகள் மன்னர் இறந்த போது மௌனமாய் நகர்ந்தார்கள் என்ற சீனபழமொழி ஞாபகம் வந்தது ..
..
#இருக்கிறவரைதான்_எல்லாம்...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment