Sunday, December 11, 2016

அடிமைகள் உடம்பில் ரத்தமெதற்கு

ஆச்சரியபட ஒன்றுமில்லை.. சட்டென்று சசிகலாவை "சின்னம்மா" ஆக்கி காலில் விழ தொடங்கியதும் இனி வரும் காலங்களில் இது முக்கிய நிகழ்வாக காலில்விழும் கலாச்சாரம் தொடரும்.. இவர்கள் கொஞ்சமேனும் கொள்கை உணர்வோடு இருந்திருந்தால் மானம் என்ற உணர்வு உயிரைவிட மேலானது என புரிந்திருக்கும்.. கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஞாபகம் வந்து தொலைக்கிறது.. நடிகர் சங்கிலிமுருகனின் தந்தையாரை சில பங்காளிகள் வயலிகாட்டில் வைத்து வெட்டுகிறார்கள். அப்போது அவரின் வேட்டி அவிழிகிறது இருடா வேட்டியை கட்டிக்கிறேன் பிறகு வெட்டுறா என்றார்.. அதைதான் கவிஞன் பாட்டில் சொன்னான்.. தமிழனின் வீரம் மானமெல்லாம் அதிமுக அடிமைகளால் புதைந்துபோய்விட்டது.. .. ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.. காசுக்கு மாரடிக்கவனுக்கு யார் முதலாளியா இருந்தா என்ன அதுவுமில்லாமல் சம்பாதிக்க அரசியலை கருவியாக்கும் இவர்களுக்கு சம்பாதிதத்தை காப்பாற்றிக்கொள்ள ஏதோவோரு தேவை இருக்கதான் செய்யும்.. மிரட்டபடலாம் ஏனெனில் இன்னும் நான்காண்டுகள் அதிகாரம் இருக்கிறது அதற்குள் நிறைய சேர்த்துக்கொள்ளமுடியும் எவ்வளவு சீக்கிரம் முடியுமென பார்பார்களே தவிர யார் தலைமையாக இருந்தால் இவர்களுக்கென்ன.. ஜெயலலிதா மரியாதையாக நடத்தியிருந்தால் சோரம் சுரணை இருந்திருக்கும் இவர்கள் அடிமாடுகளை போன்றே எப்போது வெட்டுக்கு போகும் தெரியாத நிலையிலே இருந்தார்கள்..அதனால் பெரியதாக எதிர்ப்பு இருக்காது.. .. கொஞ்சம் விவரம் உள்ளவர்களாக இருந்திருந்தால் நிறைய திரைமறைவில் நடக்கும் விடயங்கள் புரிந்திருக்கும்.. ஆசிரியர் நடராஜனை சந்தித்துவிட்டு பின் 10 ந்தேதி கலைஞரை ஆசிரியர் சந்தித்தார் .. அதன் சூட்சமம் நாங்கள்தான் அறிவோம்.. நாங்கள் மட்டும்தான் அறிவோம்.. எதிரியை கூட நாங்கள்தான் தீர்மானிக்க/தேர்தெடுக்க வேண்டியிருக்கிறது.. இதெல்லாம் புரிந்துகொள்கிற அளவிற்கு அதிமுகவினருக்கு அறிவில்லை .. #அடிமைகள்_உடம்பில்ரத்தமெதற்கு.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment