Friday, December 2, 2016
மிருகபலம் சர்வாதிகாரம்
நாட்டில் மக்கள் தொகை அதிகம் அதனால்தானம க்யூ அதிகமாக தெரிகிறது.. அருண்ஜெட்லி..
..
மேற்குவங்க முதல்வர் பயணித்த விமானம் தரையிறங்காமல் வானத்தில் வட்டமடித்தது.. தலைமைசெயலகத்தை சுற்றி ராணுவம்..
..
மோடி தன்னை முன்னிலை படுத்தவே நினைக்கிறார்.. இதுவரை 11 ஊடுருவல்களும் 25 மேற்பட்ட எல்லைதாக்குதலும் நடந்துள்ளது ராகுல்.
..
மூன்றும் வெவ்வேறு செய்திகள் ஆனால் உற்றுநோக்கின் உண்மை புலப்படும்..
நாடு மிக மோசமான நிர்வாகத்தை சந்தித்திருக்கிறது.. நாட்டின் மக்கள் தொகைதான் காரணம் என்றால் அந்த மக்கள் தானே தங்களை தேர்தெடுத்தார்கள்.. அவர்களை கேலி செய்வது எந்தவகை நியாயம்.. தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார் ஜெட்லி வாழ்த்துக்கள்.. ஆனால் செலவு 50 கோடி என்கிறார்கள் நான் என்மகள் திருமணத்தை 2.5 லட்சத்திற்குள் முடித்துக்கொள்ளவேண்டும்.. அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் பட்டியலில் ஜெட்லி தான் முதலிடம்.. பண தட்டுபாடு சரியாக 6 மாதங்கள் ஆகும்..என்கிறார் ஜெட்லி இதை முதலிலேயே சொன்ன ப.சிதம்பரம் சிறந்த நிர்வாகியல்லவா..முன் கூட்டியே அறிந்து செயல்படுவதுதானே சரி.. குளறுபடியாக சரியாக திட்டமிடாததைதானே/நிர்வாக திறமையின்மையை தானே இது காட்டுகிறது..₹1000 த்தை ஒழித்து₹2000 த்தை கொண்டுவந்த போதே உங்களின் கருப்புபண ஓழிப்பு பொய் என்று தெரிந்துவிட்டது.. மக்களிடம் கட்டுபாடை கொண்டுவந்து சில கார்ப்பரேட்களின் கனவை நினைவாக்க சிறிய தொழில்களை முடக்க தீட்டிய நீணிடகாலதிட்டம் இது..
..
மம்தாவை மிரட்ட நினைக்கிறது மத்திய அரசு.. தவறான இடத்தில் கால்வைத்த கதையாகும்..மம்தா சரியோ தவறோ தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்..மக்கள் பிரச்சனையெனில் தெருவிற்கே வந்து போராடும் குணம் கொண்ட #புரட்சிக்காரி..
ஆனால் மோடி அரசு சர்வாதிகாரத்தனத்தோடு தாங்கள் எடுக்கும் நடவடிக்கையை ஆதரிக்காதவர்களை இதே ரீதியில் மிரட்டுவோம் என்ற பழைய எமர்ஜென்ஸி காலத்தை நினைவூட்டுகிறது.. ஆனால் அப்போதும் கருணாநிதி போன்றோர் வளைந்து கொடுக்காத வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..
..
ராகுல் சொன்னதைப்போல பரபரப்பாக வைத்திருந்தால் தான் நினைத்ததை சாதிக்கவும் உடனே தேசபக்தி பாடம் நடத்தி தப்பித்துக்கொள்ளவும் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.. தினம் தினம் அறிவிப்புகளும் உடன் மாற்றி பேசுவதும் துக்ளக் தர்பாரை நினைவுபடுத்துகிறார்.. நம்மை செலவை குறைத்துக்கொள்ளும் மோடி விளம்பரத்திற்கு ₹1100 கோடி செலவு செய்கிறார்.. லட்சங்கள் செலவு செய்து கோட் அணிகிறார்.. பாஜகவினர் கோடிகள் செலவு செய்து திருமணம் நடத்துகிறார்கள்.. ஆனால் நாம் தேதபக்தியோடு கால்கடுக்க நின்று சொந்தபணத்தை எடுத்து சிக்கனமாக செலவுசெய்யவேண்டும்..
..
ஜனநாயகத்தில் அதீதபலம் சர்வாதிகாரத்திற்கு கொண்டுபோகும் என்பதற்கு இந்த அரசே சாட்சியாக நிற்கிறது..
#மிருகபலம்_மக்களை_பிறாண்டுகிறது..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment