Saturday, December 24, 2016
ஜல்லிக்கட்டு
மாட்டை அடக்குவதற்கு பதில் சிங்கத்தை தருகிறோம்
அடக்குகிறீர்களா.. உச்சநீதிமன்றம்..
நமக்கு திருப்பி கேட்க தெரியாதா.. எது வேண்டுமானாலும் உச்சநீதிமன்றம் பேசலாமா..
யானைக்கு பதில் பூனையை வைத்துக்கொள்ளலாமா..
பூனைக்கு அலங்காரம் செய்து ராஜவீதிகளில் ஊர்வலம் வருவோமா..
குதிரைப்படைவரிசைக்கு பதில் புலிகளோடு விருந்தினரை வரவேற்ப்போம்....
..
தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தை மிருகவதையென கூறுவது தமிழனை இழிவுப்படுத்தும் செயல் என ஏன் நீதிமன்றம் புரிந்துக்கொள்ள மறுக்கிறது..
நாட்டில் வாழும் மிருகங்கள் மனிதனுன் பயன்பாட்டிற்கே பெரிதும் உதவுகிறது.. மாடுகளோடான தமிழரின் உறவு பிற இனத்தவரிடமிருந்து வேறுபட்டது.. உலகில் தமிழன் மட்டுமே தன்னோடு உழைத்த மாட்டை கௌரவப்படுத்துகிறேன் .. மாட்டுப்பொங்கல் என கொண்டாடுகிறான்..
..
சில குறைகள் ஜாதீய ரீதியான விழாவாக கொண்டாடபடுகிறது.. போதைப்பொருட்களை கொடுத்து மாட்டை வெறிக்கொள்ள செய்கிறனர் என்ற குற்றசாட்டை மறுப்பதற்கில்லை.. மேலெழுந்தவாரிய பார்வையது என்றே நினைக்கிறேன்.. குறிப்பிட்ட வாட்டாரத்திற்குள் ஜல்லிக்கட்டு பிரபலமானதும் அங்கு வசிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரத்கேய கவனம்
செலுத்துவதால் எண்ணம் தோன்றுகிறது பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் மாடு வளர்க்கிறார்கள்.. அதிக பொருட்செலவில் ஜல்லிக்கட்டு மாடுகள் தயாராகின்றன.. சாராயம் போன்றவைகளுக்கு பயன்படுத்தபடுவதை தடுக்க மாடுகள் மருத்துவ பரிசோதனை செய்யபடுகின்றன. இதனால் இவர்களது குற்றசாட்டு உடைந்து போய்கிறது மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறார்கள்..
..
சங்ககாலம் முதலே மாடுபிடி எனும் ஜல்லிக்கட்டி ஏறுதழுவுதல் என புலவர்கள் பாடிவைத்திருக்கிறார்..
எங்கள் கிழவன் ..கூட
மானம் அவன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு என்று புதிய சங்கத்தமிழ் வடித்தான்.. நீதி மறுக்கபடும் போதெல்லாம் நாம் ஒன்றிணைய வேண்டியிருக்கிறது..
இனம் மொழி,கலாச்சாரம் பண்பாடு மீதான தாக்குதலை ஒருங்கிணைந்து எதிர்போம் போராடுவோம்..
#மானமிகு_தளபதியார் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாபெரும் அறப்போரை நடத்துகிறார்.. ஜாதி,மதம்,இனம் கடந்து தமிழராய் ஒன்றுபடுவோம்..வென்றுகாட்டுவோம்....
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment