Tuesday, December 27, 2016
அரசியல் சதுரங்கம்
என்ன நடக்கிறது..
அதிகாரத்தைகையிலெடுக்க அதிகாரிகள் துணைக்கொண்டு பணத்தை பெரும் முதலீடாக்கி ஊடகங்களை கவர்ந்து எப்படியேனும் வந்துவிடவேண்டுமென்று சசிகலா துடிக்கிறார்.. மறைமுகமாக ஆட்சியை கையிலெடுக்க தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து மத்தியில் ஆளும் பாஜக துடிக்கிறது தொடர்ந்து பன்னீரை வைத்து நடத்திடலாமென எணணுகிறது. இருவருமே அருகதையற்றவர்கள்...
மக்கள் வாக்களித்தது இந்த இருவருக்குமே அல்ல மாறாக தவறினும் ஜெயலலிதாவைதான் தேர்வு செய்தார்கள்..
..
திரு.பன்னீர் செல்வமோ திருமதி சசிகலாவோ
மக்களால் தேர்வு செய்யபடவில்லை ஜெயலலிதாவின் அரசில் இருந்தவர் மற்றொருவர் ஜெயலலிதாவின் தோழியென அறியபட்டவர் அவ்வளவுதான் இந்த இருவரில் மக்கள் ஏற்றுக்கொண்டால் யார்வேண்டுமானாலும் வரட்டும்.. ஆனால் இன்னும் நீண்ட நாட்கள் காலஅவகாம் இருக்கிறது என்பதற்காக
ஏற்றுக்கொள்ளமுடியாது..
பினாமிகள் அரசின் அதிகாரத்திற்கு வருவது ஆபத்தானது..
..
நேரடியாக அதிகாரத்தில் இல்லாதபோதே இவர்களின் ஆட்டம் நாடு கண்டதுதான்.. சசி வகையறாக்கள் போலீஸ் படைசூழ வலம் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.. நிறைய பேரின் சொத்துக்களை மிரட்டி வாங்கிய வழக்குக்கள் கூட இன்னமும் நிலுவையில் இருக்கிறது.. இவரை போன்றவர்கள் மக்கள் ஆதரவில்லாமல் ஆட்சிக்கு வருவது ஜனநாயகவிரோதம்..
..
ஆசிரியர் வீரமணி அவர்கள் சோதனையான காலகட்டத்தில் சசிகலாவை பொதுசெயலராக்க வேண்டுமென்பது கூட அபத்தமான பிதற்றல்தான்..
கட்சியின் உள்விவகாரம் அது.. ஆனால் முதல்வராக வரவேண்டுமென நினைக்கிற மாபியா கும்பலை தடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கழகத்திற்கு உண்டு என்பதை ஆசிரியர் உணரவேண்டும்.
ஆசரியர் சொல்வதை ஏற்க வேண்டுமென்பதில் ஏனெனில் பெரியார் சொல்கிறார்..
யார் சொன்னாலும்.. எதைப்பற்றி சொன்னாலும்..
ஏன #நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே..
..
புறவழியாக யார் வந்தாலும் அது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு.. தமிழகம் தேர்தலை சந்திப்பதே சரியானதும் முறையானதும் கூட.. சசிகலாவை மக்கள் விரும்பினாலை அவரே வரட்டும் யாரும் தடுத்திட முடியாது..
Now...
Dissolve the government..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment