Monday, January 2, 2017
ஜெயலலிதாவின் துரோகிகள்
மக்கள் பன்னீர் செல்வத்திற்கு வாக்களிக்கவில்லை
தம்பிதுரை.. ஒரேயொரு சந்தேகம் சசிகலாவிற்கு வாக்களித்து தேர்வு செய்தார்களா என்பதை தம்பி விளக்கவேண்டும்.. அரசியல் அநாதையாகவே காலம் தள்ள முடிவெடித்துவிட்டபிறகு அவர்களிடம் அறிவார்ந்த விளக்கங்களையோ நேர்மையான பதிலையோ எதிர்பார்க்கமுடியாது..
திடீரென சிலர் தமிழச்சியை ஆதரிக்கவேண்டும் என்கிறார்கள்.. சரி இதுவரை ஜெயலலிதாவை எதன் அடிப்படையில் ஆதரித்தீர்கள்.. அப்போது தமிழரல்லாத ஆரிய மங்கையென தெரியவில்லையா..
..
ஜெயலலிதா முன் பேசவே அஞ்சிய வளர்மதி ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மட்டும் அப்ரூவராக மாறியிருந்தால்.. அம்மாவின் கதை எப்போதோ முடிந்திருக்கும் என்கிறார்.. இதிலிருந்தே இவர்களின் உண்மையாக முகம் கொடூரமானது என்பது தெரிகிறது.. அதிமுகவிற்குதான் வாக்களித்தார்கள் ஜெயலலிதாவிற்காக அல்ல என தம்பிதுரை சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..
அப்படியே அதிமுகவிற்காக தான் எனில் ஏன் தேர்தலை சந்திக்க கூடாது அப்போதும் அதிமுகதானே இருக்கும்.. மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து உங்கள் புதிய சின்னம்மாவை ஆட்சியில் அமர்த்தலாமே..
..
இவர்களின் செயல்களை பார்க்கும் போது
மறைந்த ஜெயலலிதா பாவம் என்று தோன்றுகிறது..
கலப்படமற்ற சுயநலமற்ற நட்பை/உறவை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லையென்ற ஜெயலலிதாவின் வார்த்தை எத்தனை நிஜமானதென்று எத்தனை வலிகள் அந்த சொல்லில் என புரிந்துக்கொள்ள முடிகிறது.. மிக மோசமான சுயநல கிருமிகளோடே வாழ்ந்திருந்திருக்கிறார்.. சுற்றியிருந்தவர்கள் பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை அறிந்துதான் அடிமைகளாகவே வைத்திருக்கிறார்..
..
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுககாரர்களின் முகம் தெளிவாக தெரிகிறது பணம் சம்பாதிக்கவேண்டும் அதற்காக இறுதி சந்தர்ப்பம் இது இதைவிட்டால் இனி எப்போதும் நடக்காது/முடியாது என்பதை உணர்ந்து எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.. மானம் மரியாதை கௌரவம் தான் வகிக்கும் பதவியின் மரியாதை எதைவேண்டுமானாலும் அடகுவைக்க தயாராகும் கூட்டமிது.. நோக்கம் சம்பாதிக்கவேண்டும் சுரண்டியதை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் வேறொன்றுமில்லை...
இவர்களை இப்படியே அனுமதிப்பது.. மாபெரும் இழிவு தமிழ்நாட்டிற்கு ஏற்படும்..
..
ஜெயலலிதா தன் வாழ்நாளில் எது சரியாக இருந்ததோ தெரியவில்லை..ஆனால் சரியான நேர்மையான எதிரியை பெற்றிருந்தார்.. ஆம் திமுகழகமும் கலைஞரும் நேர்மையான எதிர்கட்சியாக எதிராளிகளாக இருந்திருக்கிறார்கள்..
..
#ஜெயலலிதா_துரோகிகளோடே_வாழ்ந்திருக்கிறார்…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment