Monday, December 26, 2016

கலைஞர் அவர்களே..

கலைஞருக்கு கடிதம்.. .. கலைஞர் அவர்களுக்கு.., தங்கள் நலம் தமிழ் இனத்தின் நலனோடு இணைந்தது தாங்கள் வாழும் காலத்தில் அரசியல் பேசுவது எங்கள் பேறு.. திராவிட இயக்கத்தின் மீது தீராத காதல் கொண்டதால் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது. காங்கிரஸ் நிழல் படிந்த தஞ்சை கிராம பின்னணியில் வளர்ந்த என் போன்றவர்களை திராவிட இயக்கத்தை நோக்கி நகர்த்தியதில் பெரும்பங்கு தங்களுக்கு உண்டு ஆம்.. பண்ணையார்கள் நிலக்கிழார்(மிராசுதார்) ஆதிக்கம் செலுத்திய எங்கள் தஞ்சைமண்ணில் திராவிட சிந்தனை கொண்டு சேர்த்ததும் தாங்கள் தான்..கிராமம் கிராமமாக அலைந்து காலுன்ற செய்தீர் அதை தீவிரமாய் கொண்டு சென்று சேர்த்ததில் கோ.சி.மணிக்கும் பங்குண்டு.. அந்த நன்றி எங்களுக்கு தங்கள் மீதும் மணி மீதும் எப்போதும் உண்டு அந்த தஞ்சைமண்ணிலிருந்து தான் இதை எழுதுகிறான்.. காவிரிக்காரனாய் கலைஞரின் தமிழ்காதலனாய்.. .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமை குறித்து மக்கள் நம்புகிற தலைமையை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன்.. இரண்டாவது முறையாக மாற்றிய பொதுக்குழு தேதி..அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு நடத்தலாமென்ற எண்ணம் புரிகிறது.. கழக ஆக்கப்பணிகள் குறித்து தங்கள் தலைமையில் விவாதிக்க ஆலோசிக்க இருக்கும் வேளையில் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவனின் மடல் .. சிறியதொரு பறவை சுமந்துவரும் சறுகைப்போல .. பயன்தரும் .. .. தீவிரமாய் கழகப்பணிகளைஆற்ற வயதின் காரணமாய் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது ஆனாலும் உளஉறுதியோடு செயலாற்றுகிறீர் தங்களை மையப்படுத்தியே அனைத்து நகர்கிறது..இன்னும் சொல்லப்போனால் அரசியலின் அசைவு நீர்.. மறுப்பதற்கில்லை இருப்பினும் தங்களின் ஆலோசனைகள் படியே அடுத்த தலைமுறை தலைமையை தேர்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.. நீண்டகால பயிற்சியும் அனுபவமும் கொண்ட வெற்றி தோல்வி இரண்டையும் சமநிலையில் பார்க்கிற கையாள்கிற ஐம்பதாண்டு பொதுவாழ்வில் தடம்பதித்த கட்சி ,இயக்கம் தாண்டி மக்களாலும் விரும்பபடுகிற தளபதி அவர்கள் பொறுப்பேற்கும் நேரம் வந்துவிட்டது இப்போது கூட காலந்தாழ்ந்தவிட்டதுதான்..இனியும் காலந்தாழ்த்துவது சரியாக தோன்றவில்லை.. தளபதி அவர்களின் செயல்பாடு மக்களால் ஈர்க்கபடுகிற/ விரும்பபடுகிற சூழலில் காலம் கனிந்து நிற்கும் வேளையில் அறிவிப்பதுதான் சரி.. .. நிச்சயமாக கட்சியும் தொண்டர்களும் தமிழகமக்களும் மறுப்பேதும் சொல்லாமல் தளபதியை ஏற்றுக்கொள்வார்கள்.... .. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்... அறியாதவரா தாங்கள்.. .. என்றும்.. நன்றியோடு.. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment