Wednesday, December 14, 2016

கலைஞர்

நேற்றைதினம் சிலர் ஆசைபட்டார்கள்.. மரணம் எல்லோருக்கும் உண்டு வந்தே தீரும் எப்போதென்பதில் தான் இருக்கிறது.. இந்த கிழவனிடம் இன்னமும் ஏதோயொன்றை எதிர்பார்க்கிறது அதனால்தான் அமைதியாக இயற்கை சிரிக்கிறது இவர்களை பார்த்து.. .. #கருணாநிதி தனிமனிதனில்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் ஒன்று.. அடிமைபட்டுகிடந்த இனத்தின் கூரிய போர்வாள்.. இந்த போர்வாள் தமிழனின் கையிலிருப்பதால்தான் எதிரிகள் வரவே அஞ்சுகிறார்கள்.. 1991 லிருந்தே இவர்கள் வதந்திகளுக்கு பின்னால் ஒளிந்து அரசியல் செய்கிறார்கள்.. ஆனால் கலைஞர் மட்டுமே தோல்வியிலும் கூட கொள்கை பிறழின்றி அரசியல் செய்கிறார்.. கலைஞரின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது கூட யாரையும் கடவுள் முன் மண்டியிட சொன்னதில்லை மண்சோறு அல்லல்வாலோ பாத்தியாவோ செய்ய சொன்னதில்லை யாருக்கும் இடைஞ்சல் தரவில்லை.. மருத்துவம் மூலம் எதிர்க்கொண்டார் அதைகூட வெளிப்படையாக அறிவித்துவிட்டு மருத்துவத்தோடு ஒத்துழைத்தார்.. அறிவோடு மட்டுமே அனுசரித்துப்போனார்.. .. தனிமனிதனின் ஆயுள் நீள நகைச்சுவை ஒருகாரணமென்கிறது ஆய்வு.. கலைஞரை கவனிக்கவர்களுக்கு இதுபுரியும் எப்போதும் நகைச்சுவையோடு அதே நேரம் பொருளில் சேதாரம் வராமல் பேசகூடியவர்.. உழைப்பும் நேர்மையும் எதையும் எதிர்க்கொள்ளும் நெஞ்சுரமும் ..தளறாத நம்பிக்கையும் ஒரு மனிதனின் வாழ்வின் பக்கங்களை அதிகரிக்கும்.. .. கலைஞர் நலமோடு என்கிறபோதெல்லாம் நமது மனம் நம்மையும் அறியாமல் வேண்டுகிறது பாருங்கள் அதுதான் நீண்டு வாழ உதவுகிறது.. கலைஞரால் நடக்கமுடியாமல் போனதே தவிர இயங்கமுடியாமல் போகவில்லை.. இன்னும் நம்மை இயக்கமுடியாமல் போனதில்லை.. மனதை இளமையாய் வைத்துக்கொள்பவர்களை முதுமை அடைவதேயில்லை.. .. #கலைஞர்_இளைஞர் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment