Tuesday, December 20, 2016
ஊடகஅறம்
ஊடகங்கள்..
நேற்றுவரை அதிமுககாரன் அம்மா என்றழைத்ததை ஜெயலலிதா என அழைப்பதில் ஆச்சரியபட ஒன்றுமில்ொலை ஆனால் ஊடகங்கள் ஒற்றை இரவில் மாறியதை எண்ணும் போது இவர்களின் #ஊடகஅறம் நமக்கு தெரிகிறது #காசுபணம்துட்டு..
Assets case சொத்து வழக்கென்ற மூச்சுபிடித்து முழங்கிய பாண்டே இப்போது சொத்துகுவிப்பு என்கிறார்.. ஜெயலலிதா இருந்தவரை சொத்து வழக்கானது மறைவிற்கு பிறகு சொத்து குவிப்பானது..
அதோடு விட்டாரா சசியை தூக்கிபிடிக்க வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா தான் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியென்கிறார்.. இதை ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சொல்ல மறந்துவிட்டாரென நினைக்கிறேன்..
..
கட்சிக்காரனும் ஊடகங்களும் இவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளுவார்கள் என எண்ணவில்லை..ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை இரட்டை இலைக்காக வாக்களித்தார்கள் என இவர்களால் சொல்லமுடிகிறது
திரு.பொன்னையன் போன்ற மூத்த தலைவர் கூட ஜெயலலிதாவிடம் கலந்தாலோசிக்கும் போது அவர் சின்னம்மா சகுந்தலாவை (சசிகலா என்பதற்கு பதில் சகுந்தலா என்று உளறினார்)
கலந்துக்கொள்ளுங்கள் என்பார் என்றார் ஜெயலவிதாவை இதைவிட அசிங்கப்படுத்திவிட முடியாது இப்படியெல்லாம் இவர்களால் பேசமுடிகிறதென்றால்
இதுவரை இவர்கள் நடத்தி வந்த நாடகம் #நயவஞ்சகம் இல்லாமல் வேறென்ன..
..
ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் சசிகலாவை focus கவனம் செலுத்துகிறது.. ஜெயலலிதா பின்துணைத்தது கூட ஒருவகை ஈர்ப்பால் என சொல்லலாம் ஆனால் சசிகலாவை பின்துணைப்பது முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த (பணம் பிரதானம்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கலாமென்ற ஒற்றை நோக்கை தவிர வேறேதும் இருக்க முடியாது.. இன்னும் சில ஊடகம் தீபாவை தூக்கிபிடிக்கிறது நேற்றுவரை யாரென்றே தமிழக மக்கள் அறிந்திராத ஒருவரை முதல்வராக போட்டிக்கு நிறுத்துகிற அயோக்கியதனத்தை செய்கின்றன..
..
ஊடகங்கள் சமீபகாலமாக சமூக தேச நலன் சார்ந்து செயல்படுவதே இல்லை சசிகலாவின் வரவு இந்த நாட்டிற்கு (மாநிலம்) நலன் பயக்குமா என்று யோசிக்க மறுக்கின்றன பத்திரிக்கை தொலைகாட்சி ஊடகங்கள் தங்களை உயர்த்திக்கொள்ள நினைக்கிறதே அன்றி நாட்டிற்கு நல்லதையோ மக்களின் உணர்வுகளையோ மதிக்கவோ/விரும்பவோ இல்லை.. நிறைய கருத்து வேற்றுமை இருந்த போதும் கல்கி, வாசன் ,சிவராமன் போன்றோர் சில இக்கட்டான நேரங்களின் கெட்டவைகளை சரியில்லாத தலைமையை சாடியிருக்கிறார்கள்.. சரியானமுடிவுகளுக்கு ஆதரவு தந்து ஊடக அறத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள்..
..
பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படுவது #ஊடகவேசித்தனம்...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment