Saturday, December 17, 2016
வருத்தமிருக்கிறது
வருத்தமிருக்கிறது ஆனால் உணர்ச்சியின் வடிகால்
கோவமாய் வெளியேறும் போது தடுத்திட முடியாது..
தம்பிதுரையும் ஜெயகுமாரையும் நாகரீகமாக அழைத்துச்சென்றவர்கள் .. வைகோவை துரத்துகிறார்களென்றால் தவறு யார் மீது என புரிந்திருக்கும்.. துரோகத்தின் முகமாக காட்சி தந்தும் மன்னித்த பெருந்தகையை மீண்டும் மீண்டும் சர்ந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கத்தியை கூர்பார்க்கும் கயமையை வேறெப்படி கைங்கர்யம் செய்வது..
தாயின் மரணத்திற்கு வந்தவரை அரசியல் செய்யவந்தவர் என்றவரிடம் எந்த நம்பிக்கையில் அரசியல் செய்வது.. இழவுவீட்டில் அரசியல் பேசுகிறவரிடம் .. மைக் கையில் கிடைத்தால் திமுகவை மட்டுமே வசவு பாடுகிறவரிடம்.. எந்த வகையில் ..நாகரீகம் பாராட்டுவதென்று தெரியவில்லை
சிலர்.. இதுதான் அரசியல் பண்பாடா என வகுப்பெடுக்கவேண்டாம்..ஏனெனில் அரசியல் நாகரீகம் மாற்று கட்சி நண்பர்களைவிட திமுககாரனிடம் அதிகம் காணலாம்..
..
தலைமை கழகமும் தளபதியும் இப்போது கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார் பாருங்கள் இதுதான் திமுகவின் அரசியல் பண்பாடு.. நடந்த சம்பவம் #வலிமிகுதியின்_வெளிபாடாய் வெடித்து சிதறியது.. இது வைகோவிற்கு புரிந்திருக்கும் .. எல்லா இடங்களிலும் அரசியல் செய்கிற அயோக்கியத்தனம் ,பிறகட்சி உள்விவகாரங்களில் அழைக்காமலே தலையிடுவது..
சமீபத்திய வைகோவின் நடவடிக்கைகளை கண்டாலே தெரியும்.. கட்சியில் ஏறக்குறைய எல்லோருமே போய்விட்டபிறகு .. அனாதையைப்போல சுற்றித்திரியும் வைகோ இனியாவது.. ஔவை சொன்ன பாட்டை நினைவில் கொள்ளலாம்.. மதியாதார் வாசல் மிதியாமை கோடி பெறும்..
..
இது தொடக்கமாக கூட இருக்கலாம் இனி பிறகட்சி தோழர்கள் கூட இதுபோன்று கடுங்கை செய்யலாம்..
எச்சரிக்கை..
#வாயடக்கவேண்டும்_வைகோ
..
ஆலஞ்சி மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment