Thursday, December 15, 2016

புறவாசலில் முகவரியில்லாதவர்கள்

முகவரி இல்லாதவர்கள் அடுத்தவர் முகவரியில்தான் அஞ்சல் செய்வார்கள்.. இன்றைக்கு தோழர்கள் சசிகலாவை சந்தித்தபோது இதுதான் தோன்றியது.. முகவரி இழந்து அடுத்தவர் முகவரியில் அரசியல் செய்கிறார்கள்.. நிறைய கருத்துவேறுபாடுகள் வந்தபோதும் தமிழக காம்ரேட்களின் மீதான பார்வையை மாற்றிக்கொண்டதில்லை.. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அப்பட்டமான சாதீயநெடி வீசியதை கண்டு உண்மையில் கோபமே வந்தது.. .. சசிகலாவிற்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதென்கிறார்..தா.பாண்டியன்.. எதன் அடிப்படையில் சொன்னார் என விளக்கவில்லை.. சிலகாலம் உதவியாளராக இருந்தவர் என்ற ஒற்றை தகுதிமட்டுமே தமிழகத்தை ஆள போதுமானதென்கிறாரா.. கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வந்துவிட்டு போகட்டும் ஆனால் முதல்வர் பதவிக்கு வருவதற்கு தகுதியானவரா என்ன..? எப்போதேனும் மக்கள் பணி செய்தாரா.. மக்களுக்காக போராடினாரா.. ஏதேனும் தொண்டாற்றினாரா .. மிட்டாய் மீது சுற்றபட்டிருக்கும் காகிதம் குப்பைக்குதான் போகும் சேர்த்து உண்ண/தின்கமுடியாது..என்பதை அறியாதவரா தா.பா .. சசிகலாவை சந்தித்த போது அவரின் உடல்மொழி காண்போரை கூசவைத்தது .. கம்யூனஸம் பேசும் தோழர்கள் கூட இவரின் செயலை விரும்பவில்லை.. அதே போல் மற்றதோழர்களின் செயல் கூட விரும்பதகுந்ததாக இல்லை. .. முகவரியை சிலர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.. கட்சி ஆரம்பித்து ஏதும் தேறாததால் கமிஷன் நிறுவனமாக மாற்றி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. இந்தியாவின் பிரதமர் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்குவதைவிட தரகர்களுக்கு முன்னாள் நடிகைகளுக்கு நேரம் ஒதுக்குகிறார் இதுதான் பிரதமரின் லட்சணம்.. இந்த ஆட்சியில் தரகர்கள் ஜொலிக்கிறார்கள்.. பணமாற்றில் கூட தரகர்களின் கைதான் ஓங்கியிருக்கிறது.. இதுதான் இந்தியா.. .. #முகமிழந்து_முகவரிதொலைந்தவர்கள_புறவாசலில்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment