Thursday, December 29, 2016

அதிமுக பொதுக்குழு..

விசுவாசம்.. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் இறுதியாக சசிகலாவை அதாவது சின்னம்மா என்ற அடைச்சொல்லோடு விசுவாசமாக பணியாற்றுவதாக ஒப்புதல்.. அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோதே திரு.ம.கோ.ராமசந்திரன் கட்சிவிதிகளை தயாரிக்க திருச்சி சௌந்தரராஜன் நாஞ்சிலார் உள்ளிட்டோரை கொண்டகுழுவை அமைத்தார் அந்த குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காமல் பொதுசெயலரை ஒருமனதாக தேர்வு செய்யவேண்டுமென்றார்.. ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அதிமுகவின் பொதுக்குழு என்பது பேச விவாதிக்க எப்போதும் அனுமதித்ததில்லை அதைதான் ஜெயலலிதாவும் பின் தொடர்ந்தார்.. இந்தநேரத்தில் ஒன்றை பதிவு செய்யவேண்டும்..திமுகவில் ஆதித்தனார் இணைந்த நேரம் அவரை தேர்தலில் நிறுத்த முடிவுசெய்த அண்ணா அவர்கள் பொதுக்குழுவில் பேசுகிறார்.. கடைசியில் அமர்ந்திருந்த கோ.சி.மணி அவர்கள் எழுந்து நின்று ..தேர்தலில் நிற்கட்டும் பரவாயில்லை எந்த சின்னத்தில் என கேள்வி எழுப்பினார்.. உதயசூரியன் தான் உட்கார் என்றார்.. பொதுக்குழுவில் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் இருந்தது.. கலைஞர் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுவில் எதிர்கருத்தையெல்லாம் வீரபாண்டியார்,கோ.சி.மணி... போன்றோர் வைத்திருக்கிறார்கள்.. கலைஞர் சிலவற்றை ஏற்று திருத்தம் செய்த வரலாறும் உண்டு.. எல்லா பொதுக்குழுவிலும் மணியின் ஆறுமுகத்தை கருத்தை அறியாமல் கலைஞர் இருந்ததே இல்லை.. .. விசுவாசம் என்ற வார்த்தை கூட ஜனநாயகத்தில் ஒருவகை அடிமைத்தனத்தை உண்டாக்கும் .. தலைமையை ஏற்றுக்கொள்வது தலைமையின் முடிவுக்கு கட்டுபடுவதும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்ற அடிப்படையில் வேண்டுமே தவிர எதிர் கேள்விகளை எழுப்பவோ அல்லது மாற்று கருத்தை பதியவோ கூடாது எதுவானாலும் கட்டுப்பட்டு நடப்பேன் என்பது ஜனநாயக மரபல்ல ஏகாதிபத்திய சர்வாதிகார போக்கு அடிமைத்தனம். .. அப்படியே பழகிவிட்டவர்கள் தங்களின் மதிப்பை இழந்து சுயமிழந்து நிற்பவர்களிடம் உரிமைகளைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லைதான் பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரமென்ன கிளைக்கழக செயலர் மாவட்ட கழகம் பரிந்துரை செய்தே பொதுக்குழு உறுப்பினர் ஆகமுடியும்.. அவர் கட்சியின் மிக முக்கிய முடிவுகளில் பேசா மடைந்தையாக அமர்ந்து கைதூக்கி விதுவாசமுள்ள அடிமையாக இருப்பதல்ல.. கருத்தை ஆலோசனைகளை விருப்பை எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் இவையாவும் அதிமுகவில் எப்போதுமே நடந்ததில்லை.. பொதுக்குழுவின் மாண்பு எப்போதும் அதிமுகவில் கடைப்பிடிப்பதில்லை.. .. #அடிமைகளுக்கெதற்கு_கருத்துரிமை… #வீணர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment