Tuesday, December 27, 2016

ராவ்.. வாக்குமூலம்

ராவ்.. இன்னமும் தன்னை தலைமைசெயலர் என்கிறார்..கூடவே அவர் கூறிய கருத்துக்கள் அவர் அரசு அதிகாரியா அதிமுககாரா என தெரியவில்லை.. எனக்கே இந்த நிலையென்றால் சாதாரண அப்பாவி ..? அதிமுக தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்கிறார்.. உண்மையில் அதிமுக கட்சிக்காரனாகதான் 5 வருடம் இருந்திருக்கிறார்.. ஜெயலலிதாவிடம் ஐந்தரை ஆண்டு பயிற்சிப்பெற்றவன் என்கிறார்.. அரசியல் சட்டத்தை மீறிய செயல் என் மகன் மீதான குற்றசாட்டிற்கு எனது அலுவலகம் சோதனையிடப்பட்டதை கேள்வி கேட்கிறார்.. தலைமைசெயலராக தாமே தொடர்வதாக சொல்வதில் உண்மை என்ன என்னை பணிநீக்கம் செய்யாமல் சோதனை செய்திருக்க கூடாதென்கிறார்.. திருமதி கிரிஜா தலைமைசெயலராக பணிகளை கவனிக்கும் போது ராவ் நான் தான் தலைமைசெயலர் என்பது நிர்வாக குழப்பத்தை தராதா.. யார் தலைமைசெயலராக தொடரவேண்டுமென்று முதல்வர் தான் தேர்வு செய்யவேண்டுமே தவிர மத்தியரசு அல்ல .. முதல்வர் பன்னீர்செல்வம் இதற்கு விளக்கம் தரவேண்டும்.. .. திரு.ராவ் அவர்களே தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததைப்போல்தான் உங்கள் பேட்டி தருகிறது .. அப்பாவி அதிமுக தொண்டனுக்காக கவலைப்பட நீங்கள் யார்..உங்கள் மீதான குற்றசாட்டை மறுப்பதற்கு உரிமையிருக்கிறது யாரை கேட்டு சோதனை செய்தீர்கள் என்று கூட நீங்கள் கேட்கலாம் ஆனால் தங்களின் பேட்டி அதிமுக உறுப்பினரின் பேட்டியைப்போல இருப்பது கடந்த கால தங்களின் தலைமைப்பணியை/ செயல்பாடுகளை சந்தேகத்தோடு பார்க்க தோன்றுகிறது.. நேர்மையற்ற முறையில் அரசியல்கட்சி தொண்டனைப்போல தங்களின் கருத்து இருப்பது கவலைக்குரிய விடயம்.. .. தலைமை செயலகத்தை காப்பாற்ற தவறியதாக கூறப்படும் குற்றசாட்டில் உண்மையில்லாமல் இல்லை பலவீனமாக அரசை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் அவாள்களின் அரசு தங்களுக்கு சாதகமானவரை தலைமை பொறுப்பில் அமர்த்தியது.. ஆனால் ராவ் திருப்பியடிக்க தொடங்கியிருக்கிறார் தலைமைசெயலர் பதவிதான் மாநில அரசின் தலைமை பதவியென்பதால் அவர் மீது களங்கம் சுமத்த நினைத்த மத்திய அரசை கேள்விகளால் துளைத்திருக்கிறார்.. மாநில அரசு அதிகாரிகளுக்கு பாதுக்காப்பில்லை என்கிறார்.. அவரின் கருத்தை முழுவதுமாக தள்ளிவிடமுடியாது.. .. இனி.. முதல்வர் விளக்கம் அளித்திட வேண்டும்..யார் ஆட்சி செய்கிறார்கள் என விளக்கிட வேண்டும்..கவர்னர் இந்த ஆட்சியை தொடர அனுமதிப்பதா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.. அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்கள் போல செயல்பட்டது அம்பலமாகியிருக்கிறது..தலைமை செயலரே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.. அரசை dissloved (கலைத்து) செய்துவிட்டு தேர்தல் மூலம் புதிய அரசை தேர்வு செய்யவேண்டும் அப்போதுதான் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மீது,மக்களாட்சியின் மீது நம்பிக்கை வரும்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment