Saturday, December 10, 2016

சசி...

சசியும் ஜெயலலிதாவும். எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகங்களுக்கும் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா ஆடும் திரைமறைவு ஆட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.. ஜெயலலிதா அரசியல் பிரவேசம் அறிந்தவர்களுக்கு சசியின் வரவு பெரிய அதிர்ச்சியை தராது.. எம்ஜிஆரை கெஞ்சி கூத்தாடி மிரட்டி கட்சிக்குள் நுழைந்த ஜெயலலிதாவிற்கு ஒரேயொரு ஆசை மட்டும்தானியிருந்தது ஆட்சி அதிகாரம்.. அதை நோக்கி நகர எந்த தரங்கெட்ட வேலையும் செய்ய தயாரானார்.. ஆரம்பத்தில் சத்துணவுதுறையில் சிறிய பொறுப்பைதந்து ஒதுக்கிவிட தான் எண்ணியிருந்தார்.. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி கட்சியின் கொபசெ ஆனார்..தொடர்ந்து மகோராவின்(எம்ஜிஆர்) நோவை காரணம்காட்டி ராஜீவிற்கு தன்னை முதல்வராக நியமிக்க கடிதமெழுதி.. ஜானகியை மோரில் விசம் வைத்து கொல்லபார்த்ததாக சொல்லி..ஜெயலலிதாவின் அரசியல் அஸ்திவாரம் பொய்களால் ஆனது.. மகோரா மறைவிற்குபின் சட்டசபையில் நாடகமாடி.. தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முகம் வெளுக்க தொடங்கிய போது பணம் கொண்டு சாதிக்க தொடங்கினார்.. மானங்கெட்ட செங்கோட்டையன் காலில் விழ தொடங்கியதும் அதை மெல்ல ரசிக்க தொடங்கி கடைசியில் அது ஒரு மானங்கெட்டவர்களை அடிமைகளை பெருமளவில் உருவாக்கியது.. அடிமைப்படுத்துவதை ரசிக்க தொடங்கினார்.. .. ஆனால் சசியின் வரவும் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான்.. தங்கள் நிலைநிறுப்பை காத்துக்கொள்ளவேண்டும்.. முன்பெல்லாம் பெருத்த பணக்காரர்கள், நிலகிழார்கள்,ஜமீன்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருப்பார்கள் காரணம் சொத்தை கட்டிகாத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்தது அதையேதான் சசியும் செய்கிறார்.. தன்னை காத்துக்கொள்ள இதை விட்டால் வேறு மார்க்கமே இல்லையென்பதை சரியாக அறிந்துவைத்திருக்கிறார்.. #சசியை குறைவாக எடைபோடாதீர்கள் .. இன்றைக்கு சிஆர் சரஸ்வதி ஒருவிடயத்தை போட்டுடைத்தார். ஜெயலலிதாவை #உருவாக்கியதில் பெரும்பங்கு சசிகலாவிற்குண்டு.. வெறும் சம்பிரதாய வார்த்தையல்ல நிஜம்... இந்த முறை வெற்றி பெறுமென நம்பிக்கையே இல்லாமல் தானிருந்தார் ஜெயா..சசியின் பண விநியோகம் வீயூகம் அதிமுகவை தூக்கிநிறுத்தியது.. ஜெயலலிதாவிற்கு மண்டையில் ஏறிய பதவி போதை சசிக்கும் வரும் அதற்கு கொஞ்சம் காலமெடுக்கும்.. ஒருவேளை மக்கள் தூக்கியெறிந்தால் கட்சி லெபில் வைத்துக்கொண்டு சொத்தை காப்பாற்றிக்கொள்ளலாம்.. பெரிதாக ஒன்றுமில்லைஇதுதான்/அவ்வளவுதான் அதிமுகவரலாறு.. .. அதிமுகவிற்கு சசியை விட்டால் வேறு ஆளில்லை.. பாவம் தோன்றுகிறதா.. தயவுசெய்து பரிதாபபடாதீர்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment