Monday, December 12, 2016
வைகோவை காலம் தண்டித்திருக்கிறது
மிக மோசமான அரசியல்வாதியாக வலம் வருகிறார் வைகோ..
எல்லா கட்சிகளிலும் அக்கட்சியின் உறுப்பினரைப்போல செயல்படுகிறார்..அதிமுகவின் பொதுசெயலராக யார் வரவேண்டுமென்று தீர்மானிக்க இவர் யார் .. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் அடுத்த கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவது எந்தவகை நாகரீகம் என்று தெரியவில்லை.. சாதாரணமாக கட்சியின் தலைவர்கள் மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிட கூடாதென்ற அறிவுகூட இல்லாமல் எப்படி திமுகவில் இத்தனைகாலம் இருந்தாரென்று ஆச்சரியமாக இருக்கிறது
..
சசிகலாவை முன்னிருத்துவதில் வைகோவின் அக்கறையை விமர்சிப்பதற்கு முன் ஏன் இப்படியானார்..விரக்தியின் வெளிப்பாடா எல்லோரும் கைகழுவிவிட்டுப் போனதின் ஆற்றாமையா..
பெரியளவில் வரவேண்டி முடியாமல் கடைசியில் யாரும் சீண்டாதவராக போய்.. கௌரவமாக சொன்னால் பிறகட்சிகளுக்காக உழைக்கிற (தரகர்) வேலையோடு இவரது அரசியல் வாழ்க்கை முடிவு பெறும்..
..
சசியை வேலுநாச்சியார் அளவிற்கு புகழ்ந்து பேசுவது எதையோ எதிர்பார்க்கிறாரென்று தெரிகிறது..இவரை விடுங்கள் தஞ்சையில் வழிநெடுக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில #விசமிகள் சாணியடித்திருக்கிறார்கள் நேற்றைய தினம் பார்த்தேன் இன்று சாணி முகத்தோடு அந்த விசமிகள் அதிமுகவினரின் அடிமட்ட தொண்டனாக இருக்கலாம் அல்லது இவர்கள் தரப்பே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு புதிய அலையை கிரியேட் செய்யலாம்.. ஆனாலும் சசியின் வரவு யாருக்கு பயன் அளிக்கிறதோ இல்லையோ இந்த அரசியல் முட்டாள் வைகோவிற்கு பயனளிக்கும்.. தஞ்சை செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் மதிமுக கொடிபறக்கும் வைகோவை போஸ்டரில் பார்க்கலாம் இப்போதெல்லாம் எங்கும் காணோம்.. அந்தளவிற்கு தான் அவரது கட்சியை வளர்த்த லட்சணம்.
இதில் இவர் மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறார்..
..
எனக்கொரு சந்தேகம் இவரை ஊடகங்கள் ஏன் மற்ற கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுகிறீர் என கேட்பதில்லை..அருகிலிருப்பவர்களாவது சொல்லி இனியேனும் மைக் கிடைத்தால் தோள் துண்டை பிடித்துக்கொண்டு உளறும் பழக்கத்தை விட சொல்லுங்கள் இது மேடையல்ல பத்திரிக்கையாளர் சந்திப்பு என சொல்லுங்கள்..
..
வைகோவை காலம் கடுமையாக தண்டித்திருக்கிறது..
உலக அரசியல் அறிந்தவர் உள்ளூர் அரசியல் அறியாமல் போனார்
#துரோகம்வெற்றதாய்சரித்திரமில்லை..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment