Wednesday, November 30, 2016

எச்சரிக்கை

டெபிட் கார்டை வைத்து டீக்கடை டீ குடிக்கலாம் எஸ்வி சேகர்.. அதிமேதாவிதனமாக எண்ணிக்கொள்ளும் காமெடியன்.. தொலைக்காட்சியில் வந்து மோடிக்கு வக்காலத்து வாங்கும் ராமசுப்ரமணியன் போன்றோர் ஒன்றை விளக்குவது நல்லது..எஸ்விசேகரின் நண்பரும் காமெடியனுமாகிய ஓய்ஜி மகேந்திரன் குடும்பம் நடத்தும் பாரதி வித்யாலயாவிலோ அல்லது ராம்சுப்ரமணியன் நடத்தும் பள்ளியிலோ கல்விக்கட்டணத்தை வரைவோலை demand draft மூலம் வாங்குகிறார்களா என்றால் இல்லை.. எனக்கு தெரிந்து சென்னையில் SBOA பள்ளியில் மட்டும்தான் வரைவோலையில் மூலமே பணம் செலுத்த முடியும்..எனது மகன் அங்குதான் படித்தார் அதனால் அறிவேன் ஒவ்வொருமுறையும் SBT பேங்கில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும் எல்லாம் வெளிப்படைதன்மையாக இருந்தது.. ஆனால் பத்மாவில் தனியாக எந்த கணக்கிலும் வராமல் நன்கொடையாக பெரும் தொகையை கொடுக்கவேண்டிவரும் ..எனக்கே அந்த அனுபவம் வந்தது. சிபாரிசு கடிதத்தோடு சென்றபோதும் சிபாரிசு சீட்டிற்கு தானே தவிர நன்கொடை செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தினார்கள்.. இது அங்கு பிள்ளைகளை படிக்கவைக்கும் அனைவரும் அறிந்தது... இனி பத்மா ஷேசாத்ரி பள்ளியில் கல்வி கட்டணம் வெளிப்படையாக நடக்கும் என உறுதியளிப்பார்களா இந்த தேசபக்தர்கள்.. .. இன்று அரசுஊழியர்கள் சம்பளத்தை குறிப்பிட்டளவே எடுக்கவேண்டுமென உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.. எத்தனைபேர் வாடகை வீடுகளிலே இருப்பார்கள் அவர்களை காலி செய்ய சொல்லி வீட்டுஓனர்கள் வலியுறுத்துவார்கள் அவர்கள் கணக்கில் பணம் போடுகிறேன் என சொல்லி பாருங்கள் போட்டு எடுக்கமுடியாம இருக்கவா என்பார்கள்.. சிறிய தொகையை கூட எடுக்கமுடியாமல் மக்கள் அவதியுறுகிறார்கள் .. மேல்தட்டுமக்களின் சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்கும் செயலை நீண்டகாலம் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.. கேரளாவில் மூன்று வங்கி கிளைகள் மக்களே பூட்டுபோட்டுவிட்டார்கள்.. இது தொடரும் ஆபத்து.. .. பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை நகர்த்துவதற்குமுன் அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கவேண்டும் கருப்புபண ஒழிப்பு என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம் ஏற்கனவே கருப்பு வெள்ளையாகி தேசபக்தர்கள் கையில் சிரித்துக்கொண்டிருக்கிறது.. cashless பாசிலியை நோக்கி நகர்த்த இவர்கள் நடத்திய நாடகம் தான் கருப்புபணம் ஒழிப்பு என்பது தெரியவருகிறது.. மோடி மக்களுக்கு உரையாற்றியது கூட நேரலையில் இல்லையென்றும் அது முன்கூட்டியே பதிவு செய்யபட்டது recordred என்ற உண்மை வெளியே வந்து மோடியின் முகமூடியை கிழித்திருக்கிறது.. .. மனைவியின் பிணத்தோடு வங்கி வாசலில் பணமெடுக்க தவம் கிடக்கிறான் .. ஆனால் இவர்களுக்கு மட்டும் தடையின்றி பணம் வந்ததெப்படி என்று தெரியவில்லை .. குருமூர்த்தி நராமசுப்ரமணி, எஸ்விசேகர்,மகேந்திரன் வகையறாக்கள் மட்டும் ATM பக்கமே காணோமே.. இவர்களின் தேசபக்தி வாஜ்பாய் ரகம்.. எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்/மாறிக்கொள்ளும் வகை.. இவர்கள் மிக மோசமான சந்தர்பவாதிகள் இவர்களுக்கென்கிற போது பொங்குவார்கள்.சுவாதி கொலையில் தான் பார்த்தோமே...மற்றவர்கள் பிரச்தனையெனில் தேசபக்தி என்றெல்லாம் பேசுவார்கள்.. .. #எச்சரிக்கை .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment