Wednesday, August 31, 2016
அடிமைகளின் தர்பார்
கொலைகொள்ளைகள் மற்றமாநிலத்தைவிட குறைவாக இருப்பதாக தந்திடிவி ..
..
எந்த அளவுகோல் என்றால் வடமாநிலங்கள் குறிப்பாக உபி,பீகார், மத்திய பிரதேசம்... இந்தமாநிலங்களில் இன்னமும் சாதீய வெறியும் குறிப்பாக தாழ்த்தப்பட்டமக்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் மாநிலங்களின் மக்கள் தொகையென்ன என கணக்கிட்டு பார்த்தால் மிக மோசமான மாநிலமாகதான் தமிழகம் இருக்கிறது இவர்கள் கணக்கில் கேரளா,கர்நாடக ஆந்திராவைவிட தமிழகம் மிக மோசமாக இருப்பதை மறைக்கமுயல்கிறார்கள்..
ஊடகங்கங்களின் தார்மீக பொறுப்பே அரசின் அராஜக அலட்சிய போக்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், அரசை இடித்துரைப்பதும்தான்..
..
இந்த மாநிலத்தில்தான் காதலித்தற்காக சுவாதியும் காதலிக்க மறுத்தற்காக பிரான்ஸினாவும் கொல்லப்படுகிறார்கள்.. தினம் குறைந்தது கொள்ளை கொலை இல்லாமல் பொழுது விடிவதே இல்லை.. அரசின் தலைமைக்கு பக்கத்து மாநிலத்தில் அணைகட்டுவது கூட தெரியாமல் இருக்கிறது.. யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா புஷ்பா வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.. தானாக இயங்க முடியாத தலைமை என்கிறார்.. இந்திய நாடாளுமன்றத்திலேயே மாநில முதல்வர் கட்சிதலைவர் தன்னை அடித்ததாக குற்றம் சாட்டுகிறார்.. ஒரு எம்பியே உயிருக்கு பயந்து மத்திய அரசு பாதுகாப்போடு தான் தமிழ்நாட்டிற்குள் வரமுடிகிற அவலம்.. இதுதான் தமிழக சட்டஒழுங்கு..
..
சட்டமன்றத்தை பாட்டிபாடும் கச்சேரி மேடையாக்கியதும் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் எதற்கெடுத்தாலும் முந்தைய திமுக ஆட்சியை குறைகூறுவதும்..
ஏதேனும் ஒரு தொலைநோக்கு திட்டங்களோ சமுதாயத்தில் அடிதட்டில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ இல்லை.. இட்லிகடையும் ,பூங்காவும் வாழ்வியல் வளம் சேர்க்க உதவாது..
காவிரியில் என்னால்தான் முடிந்தது என பொய்யுரைத்து பட்டமெல்லாம் வாங்கியவர்.. இப்போது சிறுவாணியில் யார் மீது பழிபோடலாமன நினைக்கிறார்.. தமிழக உரிமைகள் பறிபோக ஜெயலலிதாதான் காரணம்
#காவிரித்தாய் பட்டத்தை திரும்பபெற வேண்டும்
..
அசோகரைவிட அதிக திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என தனபால் புகழ்வதும் தான் கேவலத்தின் உச்சம் சபாநாயகரின்
தகுதியை மீறிய உளறல்..
வீதிதோறும் மரம் நட்டான் அசோகன்.. வீதிதோறும் சாராயக்கடை.. ஜெயலலிதாவின் புகழ்பாடும்..
..
ஜெயலலிதா அரசின் லட்சணம்.. அமைச்சர் பாட அடிமைகள் தாளம் போட.. ஆஹா..
சட்டமன்றம் கூத்து கட்டும் சபையானது..
அடிமைகள் என்றாலே.. #அதிமுகவினரை காட்டுகிற குகூள்.. இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சிசெய்யும் விதம்..
..
வாழைமர தோரணங்கள் எல்லாம்கட்டி கடைசியில் இழவு வீடான கதைதான்..
#நூறுநாட்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment