Saturday, August 6, 2016

இடஒதுக்கீட்டில் ..பிஜேபியின் தந்திரம்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லாது குஜராத் உயர்நீதிமன்றம்.. ஆர்எஸ்எஸ் எனும் பிராமணர்களுக்கான அமைப்பு செயல்படுத்த நினைத்த பொருளாதார அளவுகோலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு பொருளாதாரம் ஒரு அளவுகோல் அல்ல என்றும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட இடஒதுக்கீடு அரசிலமைப்பு எதிரானது என்றும் தீர்பளித்திருக்கிறது.. .. நீண்டநாட்களுக்காக புறவழியாக சலுகைகளை அனுபவிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் கும்பல் மறைமுகமாக செயல்பட்டு வருவது அதிகமாகி இருக்கிறது.. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 29 சதவிகித ஒதுக்கீட்டு கல்வி வேலைவாய்ப்பில் தரவேண்டுமென்ற மண்டல் கமிஷன் அறிக்கை கடுமையாக எதிர்த்து தீக்குளிக்க செய்து தடுக்க பார்த்தார்கள்.. திரு. வி.பி சிங் பிரதமரான போது திமுக போன்ற கட்சிகளின் கடும் முயற்சியால் அது சட்டவடிவம் பெற்றது.. கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா கூட நடந்தது.. .. யார் பிற்படுத்த மிகவும் பிற்படுத்தவர்கள் என்றால் யாரை ஏவி பார்பனர்கள் குளிர்காய்கிறார்களோ அவர்கள்தான்.. இன்னும் கூட தெளிவாக சொல்லவேண்டுமென்றால் இடைசாதிக்காரன், இஸ்லாமியன் கிருஸ்துவன்.. எல்லாமதங்களிலும் உள்ள இடைநிலையர்கள்.. நீண்டநாட்களாக பிற்படுத்த மக்களின் உரிமைகளை தட்டிபறித்து அனுபவித்து வந்த இனம் மண்டல் பரிந்துரை சட்டவடிவமான பிறகு அதை எப்படியாவது முடக்கிடயெண்ணி செய்கிற சூழ்ச்சியிது.. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் வசதியானவர்கள் விட்டுதரவேண்டுமென சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் தொடர்ந்து உயர்கல்வியிலோ,அல்லது உயர்பதவிகளிலோ இடஒதுக்கீட்டை கொண்டு வராமல் உயர்ஜாதியினர் மட்டுமே அனுபவித்து வருவதை அவர்கள் ஏன் பிறிபடுத்தப்பட்டவருக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்கள் இனத்திலுள்ள ஏழைகளுக்கோ விட்டுதரவில்லை என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.. .. பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியானவர்கள் விட்டுகொடுத்தாலும் அது மற்றொரு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு செல்லவேண்டும் இன்னும் கூட இடஒதுக்கீட்டு அளவு 80 சதவிகித்த பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கிற நாட்டில் 27 சதவிகிதம் என்பது குறைவானதாகதான் இருக்கிறது.. நிறைய பேர் இதன் பலனை அனுபவிக்க முடியவில்லை.. 3 சதவிகிதம் கூட இல்லாத பிராமணர்கள் ஒவ்வொரு பதவிகளிலும் 27 % தொடங்கி 52% வரை இருக்கிறார்கள் இதனால் பெரும் இழப்பு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் .. .. ஏதையாவது செய்து இழந்த சலுகைகளை உரிமைகளையல்ல பெற்றிட வேண்டுமென நினைக்கிறார்கள் குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.. உயர்ஜாதியினர் மீதான தாழ்த்தப்பட்டமக்களின் போராட்டமும் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சிறுபான்மையினரும் இம்முறை மாற்றத்தை கொண்டுவருவார்கள் என செய்திகள் வரும் வேளையில் இவர்களின் கொள்ளைப்புறமாக இடஒதுக்கீட்டிற்கு வேட்டுவைக்கும் செயல் தடுக்கப்பட்டிருப்பது ஆறுதல் தரும் செய்தி.. .. இன்னும்_விசம்_பிடுங்கப்படவேண்டும்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment