Tuesday, August 30, 2016

சட்டமன்றம்..

சண்முகநாதனுக்கு பதில் மாபா.பாண்டியராஜ் முதல்வர் தனக்கு பிடித்தமானவரை அல்லது தேவையானவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது அவர் விருப்பம்.. மாற்றுகருத்தில்லை ஆனால் ஏன் ஒருவர் அமைச்சரவையிலிருந்து மாற்றப்படுகிறார் என்பதற்கு குறைந்தபட்சம் விளக்கமாவது தரவேண்டும்.. ஒருவரை தொடர்ந்து சிலகாலம் ஒருதுறையில் வைத்திருந்தால்தான் அவர் அந்த துறைப்பற்றிய அறிவை பெற முடியும்.. அடிக்கடி மாற்றுவதால் துறைசார்ந்த வேலைகள் /பணிகள் தேக்கமடையும் இவையெல்லாம் அறிந்தும் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது.. சிறந்த நிர்வாகத்தை தராது.. .. நிறைய மரபுகள் மீற படுகின்றன புதிய உறுப்பினரின் கன்னிப்பேச்சில் குறிக்கிடுவது கூடாது ஆனால் அன்பில் மகேஷின் பேச்சில் அமைச்சர் பன்னீர் செல்வம் குறிக்கிடுகிறார்.. சட்டமன்றம் நடக்கும் போது அறிவிப்புகளை சட்டமன்றத்தில் தான் அளிக்கவேண்டும் அதுவும் துறைசார்ந்த விவாதத்தில் ஆனால் விவாதம் முடிந்தபின் மற்றொரு விவாதத்தில் குறிக்கிட்டு முடிந்துபோன மான்ய விவாதத்தின் அறிவிப்புகளை செய்யகூடாது அது உபரியாகவோ அல்லது கூடுதல் நிதிநிலை அறிக்கையாகவோ தரவேண்டும் இதெல்லாம் மரபு மீறியசெயல்கள்.. அதைவிட கொடுமை சட்டமன்றம் நடந்துக்கொண்டிருக்கும் போதே அமைச்சரவை மாற்றம் .. மரபுகளை மீறுவது ஜெயலலிதாவிற்கு புதிதல்ல என்றாலும்.. அமைச்சரவை மாற்றம் என்பது அழகல்ல .. .. ஜெயலலிதா அறிந்தே தவறுகளை செய்வதும் அதை நியாயப்படுத்தி ஊடகங்கள் ஜால்ரா அடிப்பதும் காலக்கொடுமை.. .. #வாசல்கோணல்.. ..

No comments:

Post a Comment