Tuesday, August 2, 2016

பத்திரிக்கைதர்மம் எங்கே..?

திரு.பாண்டே .. என்ன தயக்கம் .. ஜெயலலிதா அறைந்ததாக பகிரங்கமாக பொதுமேடையில் அல்ல ராஜ்யசபாவில் உலகமே கவனித்துக்கொண்டிருக்கும் (நேரலை) போது அதிமுக எம்பியாக இருந்த சசிகவாபுஷ்பா குற்றம் சாட்டுகிறார்.. தன் தலைவி அறைந்ததாகவே சொல்கிறார்..தன்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தியதாகவும் மிரட்டியதாகவும் சொன்னார்.. அதைவிட முக்கியமாய் தன் உயிருக்கு ஆபத்து என்கிறார்.. சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலமணிகளுக்குள் அவரின் வீடு அதிமுகவினரால் (இவர்கள் ரௌடிகள் என அழைக்கபடமாட்டார்கள்) தாக்கப்படுகிறது ..இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்தது.. தாக்குதல் நடத்தியவர்கள் மீது அல்லது தூண்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை என விவாதம் வைக்காதது ஏன்.. திமுக எம்பியை தாக்கியதற்கு நாடாளுமன்ற அவையிலேயே பகிரங்கமாக மன்னிப்பை கேட்டுவிட்டப்பின் அது குறித்து விவாதிக்க என்ன இருக்கிறது.. இருநபர் பிரச்சனை என்கிற தாங்கள் ஜெயலலிதா சசிகலாபுஷ்பா என்ற இரண்டுபேரின் பிரச்சனையை அதுவும் நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டியதைதானே விவாதிக்கவேண்டும்.. .. எம்பியின் செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் முன்கூட்டியே அவரை கட்சியிலிருந்து விலக்காமல் பரப்பரப்பாக குற்றசாட்டை எழுப்பிக்கொண்டிருக்கும் போது அதை இருட்டடிப்பு செய்ய கட்சியிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கை எடுத்தது ஏன்.. இது உட்கட்சி விவகாரம் என ஒதுக்கிவிட முடியாது அவரை அழைத்து விசாரித்ததுவரை அது உட்கட்சி விவகாரம் என்னை பெண் என்றும் பாராமல் அடித்தார்கள் என குற்றம்சாட்டிய பிறகு கிரிமினல் நடவடிக்கையின் கீழ் குற்றப்பதிவு செய்திருக்கவேண்டாமா.. இப்போது டெல்லி போலீஸ் பாதுகாப்பு அளித்திருப்பதிலிருந்தே சசிகலாவிற்கு பாதுகாப்பான சூழல்இல்லை என்று தானே பொருள்.. இதையெல்லாம் எப்போது பேச போகிறீர்.. வழக்கம் போல இனபாசத்தோடு ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குவீர்களெனில் அதற்கு ஊடகத்துறையை விட்டுவிடலாம்.. .. #பாவம்_ஜனநாயகத்தின்நான்காம்தூண்..

No comments:

Post a Comment