Tuesday, August 16, 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு.. திருமதி.மேனகா காந்தி ஜல்லிக்கட்டை விட வேறு பணிகள் மத்திய அரசிற்கு இருக்கிறது தமிழக பாஜகவினர் புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.. ஜல்லிக்கட்டை விட மாட்டு மூத்திரத்தை விற்பதையும் கங்கையின் அசுத்தத்தை தபால்நிலையங்களில் விற்பதற்கு மத்திய அரசிற்கு முடிகிற போது தமிழர்களின் வீரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப்பிணைந்த ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு நேரமில்லை.. .. மாடுபிடிப்பதில் சில தவறுகள் நடந்திருக்கலாம் அது ஒரு ஜாதிக்கான அடையாளமாக பார்க்கப்பட்டு மற்ற பிரிவினர் அதில் அக்கறை எடுத்துக்கொள்ளவோ அல்லது கலந்துக்கொள்ளவோ மறுக்கப்பட்டிருக்கலாம் அதையெல்லாம் சரிசெய்துவிட கூடிய அற்ப காரணங்கள் .. இதையெல்லாம் காரணம் காட்டி ஜல்லிக்கட்டை வேண்டாமென்கிற நிலைபாடு சரியானதல்ல.. .. தமிழக அரசியல்கட்சிகள்/தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிற விடயமும் கூட தமிழன் பண்பாட்டு வடிவமாக ஆதிகாலம் தொட்டே நடந்து வந்த வீரவிளையாட்டை சில அற்ப காரணங்களை சொல்லி நிறுத்திட முயல்கிறார்கள்.. மிருகவதை என்ற பெயரில் மேனகா போன்றோர்கள் பேசிவருவது எந்த வகையிலும் நியாயமில்லை.. மிருகங்கள் குறிப்பாக கால்நடைகள் வரிசையில் வருபவை மனிதனின் தொழிற்சார்ந்த பணிக்களுக்கே பயன் பட்டிருக்கிறது.. மனிதனின் வாழ்வியலோடு கலந்தது அவனின் உழைப்பு,உணவு,உல்லாசம்,பயணம் என கால்நடைகளோடு வாழ்பவன் .. .. சிலருக்கு விளையாட்டிற்காக வளர்ப்புபிராணி..அல்லது செல்லம் என்றிருக்கலாம்..பிரதானமாய் ... தமிழனின் வாழ்வில் கால்நடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது அவன் உணவு, இசை, கலாச்சாரநிகழ்வு பண்பாடு அரசியல் வீரம் என மாடுகள் பயன்படுகிறது.. ஜல்லிக்கட்டிற்காக மாடுகள் தயாரிக்கும் முறை கூட ரசிக்கதக்கதாக அதிகவனம் கொண்டதாக இருக்கும்..சில வேண்டாத சம்பவங்கள் (மாட்டிற்கு சாராயம் ஆசனவாயில் மிளகாய் பூசுதல்) நடந்திருக்கலாம் அவையெல்லாம் கண்காணிக்கப்பட்டு செம்மையாக நடந்து வந்த ஜல்லிக்கட்டை சிலரின் விருப்பத்திற்காக தடைவிதிப்பது சரியல்ல.. .. இன்னும் கூட கடுமையான விதிகளை பயன்படுத்துங்கள் அவைகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படும் .. ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதா வின் கருத்தில் / சொல்லில் மாறுபடுவதை ஏற்கமுடியாது.. ஜல்லிக்கட்டு ஆபத்தானதில்லை மேனகாவின் வார்த்தைதான் ஆபத்தானது... #மேனகா_வாய்மூடிஇருந்தால்நலம்.. .. #ஜல்லிக்கட்டு_தமிழரின்பண்பாடு.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment