Tuesday, August 16, 2016
என்னசெய்தது திராவிடம்
என்ன செய்தது திராவிடம்..
பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் மாநிலத்தின் முதல்வர்.. சுதந்திர தின மற்றும் குடியரசு தினத்திற்கு குடியரசுதலைவர், மாநில ஆளுநர்தானே கொடியேற்றுகிறார் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில முதல்வரோ பிரதமரோ ஏன் ஏற்ற கூடாது அதற்கு அவர்களுக்கு அருகதையில்லையா.. அதற்கான உரிமையை ஏன் தரக்கூடாது என கடிதம் எழுதுகிறார்..
கடிதத்தில் இருக்கிற உணர்வை /உரிமையை மதித்து உடனே பிரதமரும் மரபுகளை மாற்றி இனி சுதந்திர தினத்தில் மாநிலத்தின் முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றலாம் என அறிவிக்கிறார்..
..
அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் .. முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையை பெற்று தந்தது #கலைஞர் ..
அதுவரை எந்த மாநில முதல்வர்களும் தங்களின் உரிமை இது என அறிந்திருக்கவில்லை சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவர் கலைஞர் மக்கள் பிரிதிநிதிகள் தேசிய கொடியை ஏன் ஏற்றகூடாது என சிந்தித்ததால் தான் இன்றைக்கு நாட்டின் முதல்வர்கள் தேசியகொடியை ஏற்றுகிறார்கள்..
..
விடுதலைநாளில் தேசிய கொடியை முதல்வர்களும் நாட்டின் பிரதமரும் இன்றைக்கு ஏற்றுகிறார்கள் என்றால் அது திராவிடத்தலைவன் கலைஞரின் உரிமைப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..
இந்த விடுதலைநாளில் பெருமைக்கொள்வோம்
#கலைஞரை எண்ணி..
..
#திராவிடன்_தமிழன்_இந்தியன்..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment