Saturday, August 27, 2016

கல்வி...

SRM .. பச்சை முத்து கைதிற்கு பிறகு நடக்கும் திரைமறைவு அரசியல் .. பச்சைமுத்துவின் வளர்ச்சி அரசியல் மற்றும் பணம் என்பதை கடந்து அவரின் உழைப்பும் பங்களிப்பும் மிகபெரிய அளவில் வளர காரணம்.. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டாலும் அதன் பின்புலத்தில் சில கசப்பான உண்மைகள் புதைந்திருக்கும்.. .. பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து ஐசரி வேலன் விரட்டப்பட்டதின் பின்னில் யார் செயல்பட்டார்களோ அவர்களே பச்சைமுத்துவின் கைதுக்கு பிறகு நடந்த திரைமறைவு அரசியலில் இருக்கிறார்கள்.. நடந்த சம்பவங்கள் கண்டிக்க / தண்டிக்கதக்கது மாற்றில்லை.. ஆனால் இதே பகல் கொள்ளையை நடத்தும் சாஸ்திரா மீதோ.. இளம் பிச்சுகளின் படிப்பில் கொள்ளையையும் வெறியைஞ ஊட்டும் பத்மா சேஷாத்திரி மீது நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை.. கட்டணக்கொள்ளையை நடத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்தும்..இவர்களின் ரோமத்தை கூட தொடமுடியவில்லையே ஏன்.... ஐசரி கணேஷை மிரட்டியதை போல இவர்களை மிரட்டி சொத்தை அகரிக்கவோ அல்லது நிர்வாகத்தின் பங்கை பெறவோ முடியவில்லையே ஏன்.. .. பச்சைமுத்தென்ற கல்வி கொள்ளையனை நியாயப்படுத்தவில்லை மாறாக சாஸ்திராக்களும் சேஷாத்திரிக்களும் எங்களுக்காக கடைவிரிக்க தயாரில்லை என்பதும் சுடுகின்ற நிஜம்.. காசு உள்ளவன் வெளியே வருவதில் இந்த நீதிமன்றங்கள் சிலநேரம் கண் மூடிக்கொள்ளும்.. மோசடி ஏமாற்று எல்லாம் எல்லா கல்வி நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டுதானியிருக்கிறது..அவையாவும் மாட்டிக்கொள்ளும்வரை அல்லது பேராசை படாதாவரை.. ஒன்றும் வெளியே வராது.. .. நண்பர் ஒருவர் தன் மகனை சேர்பதற்காக பத்மா சேஷாத்ரி சென்றபோது.. அதுவும் நண்பர் மத்திய அமைச்சரின் பரிந்துரையோடு வந்தார் காசு தர தயாராக இருந்தும் இடம் கிடைக்கவில்லை.. கள்ளப்பய ரெகமண்ட் பண்ணியிருக்கான் என காதுபடவே பேசினார்கள்.. இவ்வளவிற்கும் எல்கேஜி க்கு 2L வரை கொடுக்க தயாராக இருந்தார்.. மந்திரியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.. காரணம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.. .. இன்றைய கல்வி வியாபாரமானதற்கு எம்ஜிஆரின் கல்விக்கொள்கையும் .. அதை தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களையெல்லாம் நிகர்நிலை பல்கலைகழகங்களாக மாற்றியதும் தான்.. SRM போன்ற பிரமாண்ட கல்வி கட்டமைப்பை அரசே ஏற்று நடத்தினால் ஒரு வேளை கட்டண கொள்ளை குறையலாம் நிச்சயமாக தரமான கல்வியென்ற மக்களின் மாயையை, ஊழலை ஒழித்திட முடியாது.. .. கல்வி எதென்பதில் மக்களின் அறியாமையை அகற்றாதவரை கல்வியாளர்கள் புதிய அவதாரங்களோடு வருவார்கள்.. ..

No comments:

Post a Comment