Tuesday, August 9, 2016
அதிமுக அரசியல்..
மிரட்டப்படும் ..
சசிகலா மீது தமிழகத்தில் தொடர்ந்து வழக்குகள் புனையப்படுகிறது.. ஏன் புனையப்படுகிறது என்பதன் பிண்ணனி சில தகவல்களை அவரது கட்சியினருக்கு உணர்த்தும் தமக்கு விசுவாசமாக அடிமையாக இருக்கிறவரை எதுவேண்டுமானாலும் செய்துக்கொள் அதைப்பற்றி கவலையில்லை மாறாக எனது கட்டளையை மீறினால் பல்வேறு வழிகளில் மிரட்டப்படுவாய்..
..
சசிகலா என்ற அரசியல் பிரமுகரோடு நமக்கு உடன்பாடில்லை அவரின் அரசியல் ஏற்புடையதுமல்ல ஆனால் அவரைப்பற்றி வரும் செய்திகளின் பின்னணியில் இருக்கிற மர்மங்கள் தமிழக அரசியல் இவ்வளவு கேவலமான பாதையில் செல்கிறது என்பதை எண்ணும் போது கவலைவருகிறது..
சசிகலா வீட்டு பணிப்பெண் தரும் தகவல்கள் எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை வேலையாட்களை கொடுமைப்படுத்தியதாக சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அதன்பிறகு அவர் சொல்லும் குற்றசாட்டை அவரின் தனிப்பட்ட செயல்களை இங்கே சொல்லவேண்டிய அவசியமில்லை.. சசிகலாவை காமவெறியர் என சித்திரிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அதில் உண்மையிருக்கலாம் அதை விசாரிக்கவோ தெரிந்துக்கொள்ளவோ வேண்டியதில்லை..
அவர் திருப்பியடித்து.. பழையதை கிளறினால் அசிங்கமாகிப்போகும்..
..
கட்சியில் இருந்தவரை இவர்மீது புகார்கள் கொடுக்கப்படாததும் சசிகலா முதல்வர் மீது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் புகார் கூறியதும் டெல்லி காவலில் அவர் ஜெயலலிதா மீது நேரடியாகவே குற்றம் சாட்டி மனு அளித்ததும் ஜெயலலிதாவை கோபம் கொள்ள செய்திருக்கிறது..
..
மிகவும் மட்டமான /கீழ்த்தரமான அரசியலை எம்ஜிஆர் செய்வார் அவர் பெண்களை பகடைகளாக பயன்படுத்தியது அப்போதெல்லாம் பிரபலமாக பேசப்படும் நிறைய #குருவிகளை வைத்திருந்தார்..
அதிமுக அரசியல் அழுக்குபடிந்த அரசியல்..
கஞ்சா கேஸில் தொடங்கி பாலியல் வழக்கு வரை வந்திருக்கிறது..
இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை ஏனெனில் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது அதுமட்டும்தான்..
..
#கீழ்த்தரமான_அரசியல்.
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment