Tuesday, August 16, 2016

என்று தீரும்

ஏறக்குறைய அனைத்து கதவுகளும் அடைப்பட்டது போன்ற உணர்வு.. 120 கோடிமக்கள் வாழும் பரந்த தேசத்தில் உலக விளையாட்டு திருவிழாவில் ஒலிம்பிக் ஒரு பதக்கம் கூட வாங்க முடியவில்லை..ஜிம்னாஸ்டிக் தீபா கர்மாகர் இறுதிச்சுற்று வரை வந்து நான்காம் இடம் பிடித்திருக்கிறது..இந்திய மனங்களில் சின்னதொரு ஆறுதல்.... .. விளையாட்டு அல்ல என ஒலிம்பிக் ஏற்றுக்கொள்ளாத கிரிக்கெட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை பிற விளையாட்டுகளுக்கு தரவேண்டும் ..ஆனால் இங்கு நடப்பதோ பக்கா அரசியல்.. திறமையானவனை கண்டறியபடுவதேஇல்லை.. சிலர் தானாக முயன்று தன் முழு திறமையையும் வெளிகாட்டினாலும் .. அவன் யார் என்று பார்க்கிறார்கள் அவனின் பின்புலமென்ன நம்மஆளா என்றெல்லாம் நோக்குகிறார்கள்..சரியான பயிற்சியின்றி சிலர் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. சிலருக்கு பொருளாதார சிக்கல் இதையெல்லாம் தாண்டி தேர்வு கமிட்டி வரை வந்துவிட்டால் அங்கே #அணுசரித்து போகவேண்டும் அல்லது சிபாரிசு வேண்டும் அல்லது அவன் ஆளாக இருக்கவேண்டும்..இது இந்தியாவின் சாபகேடு.. .. பேசாமல் ஒலிம்பிக்கில் 10 ஆண்டுகள் பங்கேற்பதில்லையென முடிவெடுக்கவேண்டும் .. திறமையானவர்களை கண்டறிந்து நேர்மையான முறையில் தேர்வு செய்து சரியான பயிற்சி அளித்தால் நமக்கு பதக்கங்கள் கிட்டும்..மிக சிறிய நாடுகள் கூட பதக்கப்பட்டியலில் வரும் போது இந்தியாவின் பெயர் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது.. .. விளையாட்டில்கூட லஞ்சம் பணம் பரிந்துரை வேண்டியவன்,இதனோடு அரசியல் அதிகாரிகள் கொள்ளையென அடிக்கிக்கொண்டே போகலாம்.. சுதந்திர இந்தியாவில் விளையாட்டில் கூட நம்மால் சோபிக்க முடியவில்லை அதற்கு தகுதியில்லாதவர்கள் காரணமில்லை தகுதியில்லாதவன் பணத்தை, பெண்ணை, அதிகாரத்தை, காட்டி இடம் பிடிக்கிறான்.. உண்மையான திறமைசாலிகள் மறைக்கப்படுகிறார்கள்.. .. வெள்ளைக்காரனிடம் விடுதலை வாங்கி கொள்ளைக்காரனிடம் கொடுத்துவிட்டோம் என்றார் பெரியார்.. எவ்வளவு சரியான பார்வை.. விளையாட்டில் கூட அரசியல் செய்கிற ஈனத்தனத்தை ஒழித்தால் தான்.. ஒலிம்பிக் பதக்கம் நனவாகும்.. .. #என்றுதீரும்.. .. ஆலஞ்சி.மன்சூர்.

No comments:

Post a Comment