Wednesday, August 24, 2016
அவதூறு...
அவதூறு..
இதொன்றும் ஜெயலலிதாவிற்கு எத்தனை முறை கொட்டினாலும் அவருக்கு ரோசம் வராது.. கண்டனத்தை பதிவு செய்வதால் மனமுடைந்து போகமாட்டார்.. அதெல்லாம் மானமுள்ளவர்கள் செயல்..
..
ஜெயலலிதாவை அவர் அரசை நீதிமன்றங்கள் கண்டிப்பதொன்றும் புதிதல்ல டான்சி வழக்கிலேயே நீதிமன்றம் தன் கண்டனத்தை பலமாக பதிவு செய்திருக்கிறது.. ஆனால் தொடர்ந்து நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகிற ஒரு தலைவர் உண்டென்றால் அது ஜெயலலிதா தான்..
..
பொதுவாழ்விற்கு வந்தவர்கள்
விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் விமர்சனம் செய்ய கூடாது என்பது சர்வாதிகாரச்செயல் .. ஜெயலலிதாவிற்கு இதெல்லாம் புரியாது கண்டனத்தாலோ நீண்ட விளக்கம் தருவதாலோ ஜெயலலிதா திருந்திவிட போவதில்லை..
..
அரசு வழக்கறிஞர்களை தன் சொந்த நலனுக்காக / வழக்கிற்காக பயன்படுத்திய தவறுக்கான தண்டனையை தரவேண்டும்.. அரசு வழக்கறிஞர்களை ஜெயலலிதாவின் சொந்த வழக்கில் வாதாடிமைக்காக பெற்ற அரசுபணத்தை திரும்ப பெறவேண்டும்.. அதோடு மட்டுமில்லாமல் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ..தாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கெதிராக நடந்துக்கொண்டதற்கு அவரை தண்டிக்கவேண்டும்.. வெறுமனே கண்டிப்பதால் திருந்திவிட போவதில்லை.. மாறாக முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்..
..
மற்றமாநிலங்களில் இது போன்று வழக்குகள் தம்மை எதிர்போர்மீது போடபசுவதில்லையென உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது..
ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அரசு இயந்திரம் தனிநபரின் நலனுக்காக செயல்படுகிறது..
எதிர்கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் சர்வசாதாரணமாக பதியபடுவது.. ஜெயலலிதாவின் இயலாமையை காட்டுகிறது.
பயமுறுத்துவதாக எண்ணிக்கொண்டு ஜெயலலிதா செயல்படுகிறார் உண்மையில் யாருமே அஞ்சவில்லை என்பதும் மாறாக அது ஜெயலலிதா பெயரை கெடுக்க மட்டுமே உகவுகிறது என்பது அறியாத அறிவிலித்தனமாக இருக்கிறார்..
..
மிரட்டுவதாக எண்ணி.. தன் பயத்தை அம்பலப்படுத்துகிறார்.. உண்மையில் எதிரிகளின் பேச்சை உள்வாங்க மறுத்தும், அவர்களின் செயல்களை தடைசெய்தும்.. அவர்களோடு போட்டியிட முடியாமல் ஒரு வகை பயத்தோடு தோல்வி ஏற்பட்டு விடுமோ என அஞ்சி செயல்படுகிறார்..
#இது_கோழைத்தனம்…
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment