Wednesday, August 31, 2016

கமல்

கமல்.. கமலின் கருத்துக்களோடும் செயல்களோடும் நிறைய கருத்துவேற்றுமை உண்டு.. அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து அவரின் பெரியாரிய கருத்தின் நிழலில் இருப்பதை போன்ற தோற்றத்தை தருவதில் நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனால் சினிமா கலைஞனாக அவர் தந்த படைப்புகள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறந்ததொரு நடிப்பை தருவதிலோ யாருக்கும் எந்த விமர்சனமோ எதிர்ப்போ இல்லை.. .. அவரின் போலித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் யதார்த்தத்தை மீறி வெளிபாடு உண்டு மறுப்பதற்கில்லை.. எனக்கு தெரிந்து சினிமாவில் சமரசமே செய்துக்கொள்ளாத பகுத்தறிவாளன் இலட்சியநடிகர் எஸ்எஸ்ஆர் மட்டுமே.. கலைவாணர் தொடங்கி எம்ஆர்ராதா வரை நடிப்பில் சமரசரத்தை ஏற்றிருக்கிறார்கள்.. கொள்கையை நடிப்பில் தேவையான போதுமட்டுமே எடுத்துரைப்பதும் அந்த கதாபாத்திரம் ஆன்மீகம்..? பேசினால் அதோடு ஒன்றிபோவதுமாக இருந்தது.. .. கமல் சினிமா கலைஞனாக நிச்சயமாக சிறந்ததொரு பங்களிப்பை தமிழ்திரைக்கு ஏன் இந்திய திரைக்கு தந்திருக்கிறார் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை.. அவரை பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது கிடைத்ததை தமிழகம் பெரிதாக கொண்டாடவில்லையென்பது வருத்தம்தான் தமிழ் திரைஉலகம் கூட ஏதோ வாழ்த்துச்சொல்லி முடித்துக்கொண்டது.. .. நேற்றைய கமலில் பேட்டி பெரிதாக பேசபடுகிறது தமிழக அரசோ முதல்வரோ தமிழ்கலைஞன் உயரிய விருதை பெற்றதற்கு வாழ்த்தவில்லை.. மலையாளகரை அதை கொண்டாடுகிறது கேரள முதல்வர் வாழ்த்துகிறார்.. கமலில் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்.. எதிர்வினையாற்றுகிறார்.. .. கமலில் திரைபயணத்தின் தொடக்ககாலங்களில் கேரள திரைஉலகம்தான் அவரை தூக்கிவிட்டது..நிறைய மலையாளபடத்தில் நடித்திருக்கிறார் பிளேபாயாக.. அந்த இளமை பருவத்தில் கைகொடுத்ததென்னவோ மலையாள சினிமாதான் அந்த உணர்வில் சொல்லியிருக்ககூடும்.. .. கமல் தமிழக கலைஞன், தமிழ்நாட்டுக்காரன் என்றுதான் அடையாளப்படுத்தபடுவார்.. அவரின் சினிமாவை தவிர்த்து வேறெதும் போற்றுதலுக்குரியதில்லை எனினும் சினிமாவிலேயே தன் வாழ்வியலை கழித்த /தொலத்த மகாகலைஞன் என்பதை கொண்டாடியே தீரவேண்டும் .. தமிழகம்.. .. #தாகம்தீராத_கலைஞன்_கமல் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment