Wednesday, August 3, 2016

ஜனநாயகம் ஒருவழிபாதையல்ல..

நாங்கள் எந்த ஆயுதம் எடுக்கவேண்டுமென்று எதிரிகள் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.. உங்கள்மொழியில் தான் நாங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.. 132 கொத்தடிமைகள் சோற்றால் அடித்தபிண்டங்கள்.. சட்டமன்றத்தில் 89 வயக்காட்டு பொம்மைகள் என்றழைத்தற்கு திருப்பி கொத்தடிமைகள் என்றழைக்க வேண்டியதாகியது.. .. மொத்தத்தின் அடிமைகளை வைத்துக்கொண்டு நீண்டநாள்கள் இதைப்போல் சபையை நடத்தமுடியாது என புரிந்துபோய் இருக்கிறது சபாநாயகர் சபையை ஒத்துவைக்கிறார்.. இனி உள்ளிருப்பு போராட்டம் அதிகம் காணலாம்.. .. எதிர்கட்சிதலைவர் தளபதி அவர்கள் உரை செவிகளில் அறைந்ததைப்போல இருந்திருக்கிறது அடிமைகள் கூச்சலிட தொடங்கியதும் மறுபக்கம் திமுகவினர் கூச்சலிடவும் அவையை நடத்தமுடியாமல் ஓடவேண்டியிருந்தது.. முதல்வர் ஜெயலலிதா வயக்காட்டு பொம்மைகள் என்ற சொல் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதி அற்ற வார்த்தையல்ல எனச்சொன்ன பிறகு அமளி நடக்கிறது கொத்தடிமைகளும் சோற்றால் அடித்தபிண்டங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களை சொல்லவேண்டி வந்தது.. .. அநாகரீகம் எல்லாம் ஜெயலலிதா அறியாத ஒன்று ஜானகிராமசந்திரனை,சென்னாரெட்டியை பழிச்சொன்னதை பார்த்தவர்கள் நாம்.. ஏன் சபையில் தலைவிரிக்கோலமாக சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து #நவநாகரீக அரசியல் செய்தவர்.. அவரிடம் அவரது பாணி அரசியல் செய்யவேண்டும்.. இன்னமும் சபை நாகரீகம் என கட்டியழ தேவையில்லை .. எந்த வகையில் எந்த உடல்மொழியில் எப்படி பிரதிபலிக்கார்களோ அதே வடிவில் நாமும் திருப்பி தரவேண்டும்.. .. #ஜனநாயகம்_ஒருவழிபாதையல்ல… .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment