Monday, August 22, 2016
காற்றில் பறக்கும்...இலை
எனக்கிருந்த துணிச்சல் கருணாநிதிக்கு இருக்கிறதா என்கிறார் ஜெயலலிதா..
யார் யாரெல்லாம் துணிவைப்பற்றி பேசுவதென்றே வரைமுறை இல்லாமல் போய்விட்டது..
கலைஞர் சபைக்கு வந்தால் தன் ஏவல் நாய்களை வைத்து சகட்டு மேனிக்கு பேசவைத்து தாக்குதல் கூட நடத்திகாட்ட இருந்தது அறிந்துதான் சபையை புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டது..
80 உறுப்பினர்களை நீக்கியதன் பின்னில் ஜெயலலிதாவின் செயல்திட்டம் அறிந்துதான் திமுக செயல்பட்டது..
93 வயதுடைய மூத்த அரசியல்வாதியை ஒருமையில் பேசி சபை நடத்தும் ஈனச்செயல் ஜெயலலிதாவிற்கே உரியது..ஏனெனில் ஜெயலலிதாவின் பாதை அதுதான்.. அவருக்கு தெரிந்ததெல்லாம் குறுக்குவழி அரசியல்தான் குறுகிய மனபான்மையும் பெண் என்பதால் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறிதான் ஆரம்பகால அரசியலை நடத்தினார்..சென்னாரெட்டி என்ற பழுத்த அரசியல்வாதியை இவர் குற்றம் சுமத்தியது அறிந்ததுதான்..
இவருக்கு இருக்கிற ஒரே பலம் ஆரியப்பெண் அவ்வளவுதான் இதுதான் அவரது தகுதியும்கூட..
இவரின் ஆரம்பகால அரசியலை கவனித்தவர்கள் இன்றைய வளர்ச்சி அவரது திறமையால் வந்ததாகவோ அல்லது துணிவால் வந்ததாகவோ சொல்லமாட்டார்கள் மாறாக திரைமறைவு அரசியலை மட்டுமே இவரின் வளர்ச்சிக்கு உதவியது ..
..
கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சியென்பதை மறந்து திமுக ஆட்சியின் சட்டஒழுங்கைப்பற்றி பேசுகிறார்.. கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் குற்றங்கள் திமுக ஆட்சியை விட 21 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக மனிதஉரிமை ஆணையம் கடந்த வருடம் தந்த புள்ளிவிபர கணக்கை மறைத்து சபையில் பேசுகிறார்.. ஆளே இல்லாத கடையில் ..
..
இவர் தந்த குற்றங்களில் எண்ணிக்கை குறைவு என்ற வாதமும் தவறானது.. இந்தியளவில் மூன்றாமிடம் தமிழகத்திற்குதான்.. உ.பி போன்ற பெரிய மாநில குற்றங்களோடு ஒப்பிட கூடாது வடமாநிலங்களில் தலித் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறுவது குற்ற எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டுகிறது.. அதைவிட தலித் மீதான தாக்குதலில் இந்தியளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது என்பதை இவர் சொல்லவில்லை ஒருவேளை இதை தகுதி என்கிறாரா..
..
திமுக ஆட்சியைவிட ஏன் கடந்த அதிமுக ஆட்சியை விட மூன்றேமாதத்தில் தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்கள் .. சாரசரிக்கும் மேலானது மட்டுமல்ல கொடூரமானதும் கூட இவையெல்லாம் பேசப்படாமல் எதிர்வரிசையில் யாருமில்லாமல் ஏதோ பழைய பட வசனத்தைப்போல பேசியிருக்கிறார்..
..
துணிவென்பது தனக்கு சமமானவர்களடோ அல்லது தன்னைவிட பலம் பொருந்திவரோடு மோதுவது.. கலைஞர் கோபுரம்.. கோபுரத்தில் ஒட்டிக்கொண்ட எச்சில் இலை.. கலசமாகிவிடாது..
..
#அஞ்சாமை_திராவிடன்உடன்பிறந்தது..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment