Sunday, August 14, 2016

அடங்கி போ

பெரியாரை விட ஜெயலலிதாவை அதிகம் பின்ப்பற்றுகிறவர் ஸ்டாலின்.. திருமா எதற்காக சொன்னார் என தெரியவில்லை..பெரியாரை மீறி தி மு கழகம் எதையும் சாதிக்க முடியாது என்பதை பெரியாரிய கொள்கையிலிருந்து விலகி சென்றால் அது தன் முகத்தை இழந்துவிடும் என்பதை அறியாதவரல்ல தளபதி.. பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என நினைத்தால் அது திருமாவின் அறியாமை திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனச்சொல்லித்தான் பிரிந்தது அதைவிட திராவிட கொள்கைகளை சட்டமாக்க அதிகாரம் வேண்டுமென்பதற்காக தான் வாக்கு அரசியலில் பங்குப்பெற்றது..திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமல்ல பழங்களும் நிறைய உண்டு ஆனால் சிந்தனை செயல் எல்லாம் பாசிசத்திற்கெதிரான சமூகநீதிக்கு ஆதரவான செயல்திட்டத்தோடே இயங்குகிறது.. .. இப்போது கூட பாஜக வின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திராவிட கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெற்றது..பிறகேன் ஜெயலலிதா அரசியல் செய்கிறார் என திருமா கூறுகிறார் என்பதை ஊகிக்கமுடிகிறது.. #கலைஞரைப்போல ஒவ்வொரு முறையும் மன்னித்து அரவணித்துச்செல்லும் பழக்கத்தை கைவிட்டு இவரைப்போன்ற சில்லறைகளை வளர்த்துவிட தேவையில்லையென்ற முடிவெடுத்து அதில் திடமாக நிற்கிறார் அது திருமா போன்றவர்களுக்கு எரிச்சலை தருகிறது.. இது ஜெயலலிதாவின் அரசியலை ஒத்திருந்தாலும் கொஞ்சம் மாறுபடுகிறார் ஜெயலலிதாவின் ஆணவ/அடிமை அரசியல் இவரிடத்தில் இல்லை ஸ்டாலின் ஒரு நேர்மையான/தோழமையான போக்கை அதே நேரம் வேண்டாதவை தவிர்த்து சுயமாக எழுந்து நிற்க முயல்கிறார்.. இது எப்படி ஜெயலலிதா அரசியலாகும் .. அதுமட்டுமில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் (சாதி,மதம்) அரசியல் செய்கிறவர்கள் வேண்டாமென்ற முடிவை எடுத்திருக்கிறார்.. நீண்டநாட்கள் தங்களோடு இருக்கிறவர்களை வெற்றியிலும் தோல்வியிலும் கைகோர்த்து நின்றவர்களோடு பயணித்தால் போதுமென்ற எண்ணம்/செயல் சரியானது.. .. திருமா போன்றோர்கள் வேறு வழியே இல்லாமல் பாசிச சக்திகளோடு (பாஜக) கைகோர்த்து பிழைக்கலாம் திருமாவின் சமீபத்திய செயல்பாடுகள் அதை நோக்கி தான் நகர்கிறது.. .. #அடங்கிப்போ... .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment