Thursday, August 18, 2016

ராமதாஸ் விசவித்து...

முஸ்லிம் பெண்களை விசிக இளைஞர்கள் கவர் இழுத்திருக்கிறார்கள் சாதிவெறியர் ராமதாஸ்.. என்ன சொல்ல வருகிறார் தாழ்த்தப்பட்டவன் உயர்ஜாதி/ மத பெண்ணை திருமணம் முடிக்கிறான் அவ்வளவுதானே.. முதலில் ராமதாஸ் ஒன்றை உணர வேண்டும் ஒரு தனிநபர் தான் விருப்பபடும் ஆண்/ பெண் உடன் செல்வதை அல்லது திருமணம்/காதல் செய்வதை நீங்கள் ஏன் அரசியலாக்குகிறீர்கள்.. சம்பந்தப்பட்ட பெண்ணோ /ஆணோ மதம்மாறியோ அல்லது மதத்தை ஏற்றுக்கொள்ளாமலோ இருப்பதில் உங்களுக்கென்ன வந்தது.. .. ராமதாஸ் இதை கையிலெடுத்திருப்பதின் பின்னில் யார் இருக்கிறார்கள் என அப்பட்டமாக தெரிகிறது ஒரிரு ஒற்றைப்பட்ட சம்பவங்களை எண்ணிக்கையில் அதிகமாக்கி காட்டும் நரித்தனம் புரியாமல் இல்லை.. ஜாதியை கையிலெடுத்து மூக்கறுப்பட்டு கிடைக்கையில் எதையாவது பேசி மத கலவரத்தை தூண்டி அதில் குளிர்காய்கிற நினைக்கிறார்.. .. வடமாநிலங்களில் தலித் அமைப்புகளோடு சிறுபான்மையினர் இணைந்து போராடுவது பெரும் தலைவலியை பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு தந்திருக்கிறது அது தென்மாநிலங்களிலும் தொடர்ந்தால் இந்தியாவில் ஆதிக்கசெலுத்தும் ஆர்எஸ்எஸின் செயல்திட்டங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.. இதையறிந்து இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கி அதை மதசாயம் பூச நினைக்கும் பாசிச திட்டத்தை செயல்படுத்த தான் இந்த ஜாதிவெறியர் இப்படி உளறிக்கொட்டியிருக்கிறார்.. .. ராமதாஸின் பேச்சில் உண்மையில்லையென்பதும் இது திட்டமிட்டு மதகலவரத்தை நிகழ்த்த இஸ்லாமிய இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி சேரிகள் மீது தாக்குதல் நடத்தி அதை மத ரீதியான செயலாக்கி குளிர்காய நினைக்கும் ராமதாஸை இரு சமூகத்தினரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.. .. #ராமதாஸ்_விசவித்து_அழித்தால்_நல்லது… .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment