Tuesday, August 30, 2016
விலையென்ன?
மாணவர்களிடம் கல்விக்காக பெற்ற #நன்கொடையை..? திருப்பி தர சம்மதம் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்
..
எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க..
திருடியதை, ஏமாற்றி அபகரித்ததை, அது குற்றம் என்று தெரிந்தும் செய்ததை, அதற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத்தியதை .. அதுவும் தவறென்று தெரிந்தே பயன்படுத்தியதை( miss use) நாட்டின் மாநில முதல்வராக இருந்துக்கொண்டே செய்ததை அதற்காக தண்டனை பெற்றதை.. எல்லாம் மறந்து உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் சொத்தை திருப்பி அரசிடமே ஒப்படைக்க தயாரென்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்து பிரதான பத்திரத்தை சமர்பித்து .. விடுதலையாக முடிகிற திருநாட்டில்
பச்சைமுத்துவிற்கு 70 கோடிகள் பெரிய விசயமா என்ன.. பிச்சை காசை தூக்கியெறிந்துவிட்டு பச்சைமுத்து வெளியே வந்து கல்வியில் புரட்சியாளராக வலம் வருவார்..
..
எதற்கும் முன் உதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி சர்வசாதாரணமாக வெளியே வரலாம் .. ஜெயலலிதாவிற்கு ஒரு நீதி .. பச்சைமுத்துவிற்கு நீதியா என கேள்வி கேட்கலாம்..
அரசு பதவியையோ அல்லது அரசு சம்பளத்தை பெறுகிறவர் இல்லை.. அல்லது ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஏமாற்று வேலை செய்யவில்லை.. சுயநிதி பல்கலைகழக நிறுவனர்.. பழசையெல்லாம் கிளறி சாராய காய்ச்சியதையெல்லாம் எடுத்தால் நாங்களும் தோண்ட வேண்டியிருக்கும்..
..
பணமும் அதிகாரமும்... தவறென்று தெரிந்தும் சட்டத்தை தங்களுக்காக வளைத்தொடித்து .. அதற்கு உச்சநீதிமன்றம் போன்ற நீதிபரிபாலன உச்சசபையை பயன்படுத்துகிற கேடுகெட்டநிலை தொடருமேயானால்.. நீதியை இவ்வளவு விலைக்கு தரப்படும் அல்லது ஏலம் விடப்படுமென அறிவிப்பை வெளியிட்டுவிடலாம்.. எல்லா தவறையும் நியாயப்படுத்த ஜெயலலிதாவின் வழக்குகளே போதுமானது.. வருமானத்திற்கு சொத்துசேர்ப்பது எப்படி குற்றமாகும் என்கிற நீதிசபையில்..
பச்சைமுத்துக்களை ஒரு மயிரும் புடுங்கமுடியாது..
..
நீதியே விலையென்ன..
#JUSTICE_for_sale..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment