Wednesday, August 24, 2016
முகமறியா நல்லவர்கள்
சிலரை பிடிக்கும்
சிலரை பிடிக்காது காரணம் எதுவுமே இல்லாமல் ..
ஆனால் அவர்களின் திறமையை அவர்களின் உழைப்பை இந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது..
நம் வாழ்வில் கடந்து போகிற முகமறியாத சிலரின் நடவடிக்கைகள் நம்மை அப்படியே புரட்டி போட்டுவிடும்.
..
நமக்கு பிடித்தமானவரைவிட அல்லது நமக்கு அறிமுகமானாலும் பிடிக்காதவரை விட .. முகமறியா நாடோடியின் செயல் நம் வாழ்க்கையின் அர்தத்ததை உணர்த்திவிட்டு போகும்..
நம் வாழ்வின் வழிநெடுக நிறைய நாடோடிகளை கண்டுக்கொண்டுத்தானிருக்கிறோம்..
..
சில விடயங்களில் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவர் ஆனால் அது நம் வாழ்வின் அர்த்தம் பொதிந்த நிகழ்வை நடத்திவிட்டு போய்விடும்.. சிலரின் மௌனமோ நம்மை அறுத்துவிடும்.. பேசாமல் பேசும் செயலில் நாம் உடைத்தே போய்விடுவோம்..
சாதாரணமாக நாம் எண்ணிக்கொண்டிருப்பவரிடம் நாம் அறிந்திறாத அறிவு குவியல் கொட்டிக்கிடக்கும்..
..
சின்ன சின்ன விசயங்களை கூட மிக நேர்த்தியாக செய்துக்காட்டுவர்.. அப்படி நிறைய பேரை நிச்சயமாக வாழ்வின் வழிநெடுக நாம் சந்தித்திருப்போம்..
வாழும் வழிநெடுக நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள் .. பசியறிந்து நீராகாரம் தந்திருக்கிறார்கள்.. என் நிலையறிந்து தங்க அனுமதித்திருக்கிறார்கள்..
யாரென்றே தெரியாமல் உதவியிருக்கிறார்கள்..
..
எல்லோர் வாழ்விலும் முகம் தெரியாத சிலர் வந்து நம்மை சீர்செய்திருப்பார்கள்.. அந்த முகமறியாதோரை நாம் என்றைக்குமே மறக்க முடியாது..
..
நிறைய பேருண்டு என் வாழ்வில்..
அது சம்பவங்களாய் தோன்றும்..
நிறைய உண்டு நல்லவர்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment